Search This Blog n

08 January 2013

படிக்க மறுத்த 7 வயது மகனை அடித்து கொன்ற தாய்க்கு?

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானை படிக்க மறுத்த 7 வயது சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சுட்டும் கொடுமைப்படுத்தி, கொலை செய்த 33 வயது தாயார் ஒருவருக்கு ஆயுள் தனடனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.{ புகைபடங்கள் }
.
(கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுவனும், சிறுவனைக் கொன்ற தாயும்) இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cardiff Crown Court என்ற நீதிமன்றத்தில் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பு அளிக்கபட்டது. Sara Ege, என்ற 33 வயது பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது சிறுவனை குர்ரான் படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விளையாட்டு பருவத்தில் இருந்த அந்த சிறுவன், குர்ரான் படிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால், அந்த சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார் அந்த தாய்
(இறந்த 7 வயது சிறுவனின் இறுதிச்சடங்கு) பலத்த காயம் காரணமாக சிறுவன் எதிர்பாராத வகையில் இறந்துவிட்டான். உடனே Sara Ege, சிறுவன் இறந்த காரணத்தை மறைத்து, தடயங்களையும் அழிக்க முற்பட்டுள்ளார். மேலும் போலீஸ் விசாரணை செய்த போது, சிறுவனின் இறப்புக்கு தனது கணவனே காரணம் என கூறி தப்பிக்க முயற்சித்துள்ளார். பின்னர் போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையால் நிலைகுலைந்த Sara Ege, இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த பரபரப்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தனது மகனுக்கு குர்ரான் படிக்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நினைத்த தாயின் நோக்கம் சரியென்றாலும், அதற்காக அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்ததை மன்னிக்க முடியாது

0 கருத்துகள்:

Post a Comment