Search This Blog n

16 January 2013

பரவலாக தொடரும் படுகொலைகள்!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொழில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்துவதில் கடத்தல் கும்பல்களிடையே போட்டி நிலை நிலவி வருகிறது. இது பல நேரங்களில் வன்முறையில் முடிகிறது.
இந்நிலையில், தொலுக்கா பகுதியில் கடத்தல் கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இதேபோல், மெக்சிகோ சிட்டி என்னுமிடத்தில் 22 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
போதைப் பொருள் கும்பல்கள் மற்றும் அதுதொடர்பான வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 7 வருடங்களில் மட்டும் மெக்சிகோவில் போதைப்பொருள் வன்முறை சம்பவத்தில் சுமார் 70,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment