Search This Blog n

03 January 2013

சிறுமிகளை கற்பழித்த நபருக்கு ஆண்மை நீக்கம்:

தென் கொரியாவில் சிறுமியை கற்பழித்த காம கொடூரனுக்கு ஆண்மை நீக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் பியோ என்ற குடும்ப பெயர் கொண்ட 31 வயது மதிக்கத்தக்க நபரொருவர், ஸ்மார்ட்போன் சட்டிங் மூலம் அறிமுகமான 5 சிறுமிகளுடன் தகாத முறையில் உறவு வைத்துள்ளார்.
அதன் பின்னர் அந்த சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்த போது, எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பியோ மீது சியோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கிம் கி-யங் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில், பியோ பல பெண்களை கற்பழித்துள்ளார். எனவே அவராகவே இந்த பாலியல் ஆசையை துறந்து திருந்துவார் என்பது சாத்தியமில்லை.
எனவே அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், ரசாயன ஆண்மை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் 20 ஆண்டுகள் மின்னணு கண்காணிப்பு கொலுசு அணிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தென் கொரியாவில் குழந்தைகளை கற்பழிக்கும் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டுதான் அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment