Search This Blog n

18 January 2013

பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக மாணவி .

       


கனடா: ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் ஒரு மாணவியும், மூன்று மாணவர்களும், 357 Magnum handgun உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த காரணத்தால், ஆயுதங்கள் தடை சட்டப்பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது 42 வகையான பிரிவிகளின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயுதங்களை பள்ளிக்கு எதற்காக கொண்டு வந்தார்கள் என தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

1. Possession of a Restricted Firearm with Ammunition
2. Possession of a Restricted Weapon Obtained by the Commission of an Offence
3. Altering, Defacing, or Removing Serial Number on a Firearm
4. Careless Use of a Firearm
5. Firearm Careless Storage
6. Unauthorized Possession of a Firearm
7. Possession of Unregistered Restricted Weapon
8. Possession of a Restricted Weapon Knowing its Possession is Unauthorized
9. Careless Storage Ammunition
10. Carry Concealed Weapon


மேற்கண்ட 10 வகையான முக்கிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நான்கு மாணவர்களும் மைனர் என்பதால், அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவத்தால் துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாது, கனடாவிலும் பரவி வருவது குறித்து மாணவர்களையும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் கவலை கொள்ள செய்துள்ளது

0 கருத்துகள்:

Post a Comment