Search This Blog n

21 January 2013

மூணாறை சுற்றி வரும் யானைகள்

மூணாறிலும், சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் சில மாதங்களாக புலிகள் நடமாட்டம் உள்ளதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் தேவிகுளம்,சொக்கநாடு,நயமக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏழு, கால்நடைகள் புலிகளிடம் சிக்கி பலியாகியுள்ளன. தேவிகுளம் பகுதியில், வீட்டில் இருந்த நாயை, இரவில் புலி தூக்கிச் சென்றதை, இப்பகுதியினர் நேரில் கண்டனர். சில வாரங்களாக, புலி நடமாட்டம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில், மூணாறில் வேலை முடிந்து இரவு 8 மணியளவில், வீடு திரும்பியவர்கள் சென்ற ஆட்டோவின் முன், டாப் டிவிஷன் பகுதியில், தேயிலைத் தோட்டத்தினுள் இருந்து, ரோட்டின் குறுக்கே இரண்டு புலிகள் ஓடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் குடியிருப்பு பகுதியிலும் பரவியது. புலிகள் நடமாட்டம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதியில், புலியை நேரில் கண்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கு பதிந்திருந்த, கால் தடங்களை ஆய்வு செய்து, அவை புலியின் கால் தடங்கள் என்பதை உறுதி செய்தனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் புலி செல்லும் வரை, கால்நடைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொள்ளும் படி, தோட்ட தொழிலாளர்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment