| விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை கமலஷாசன் சந்தித்து வருகின்றார். விருதுநகர் மாவட்டத்தில் விஸ்வரூபம் படத்தை 15 நாட்களுக்கு திரையிட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். |
| விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி இஸ்லாமிய அமைப்பினர்கள் தமிழக முதல்வர்
ஜெயலலிதாவிடம் மனு அளித்துள்ளனர். படத்தை திரையிடுவதா இல்லையாக என்பது தொடர்பாக
அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பிப்ரவரி 8ம் திகதி வரை விஸ்வரூபம் படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக இதனை ஏற்குமாறும் நீதிபதி வெங்கட்ராமனை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். தணிக்கை குழு அனுமதி அளித்த பின்னும் தடை விதிப்பது சட்ட விரோதமானது என கமல் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கமலின் மனுவை ஏற்ற நீதிபதி வெங்கட்ராமன், வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் |
Pages
▼
24 January 2013
விஸ்வரூபம் படத்திற்கு தடை: கமல் மனு தாக்கல்
By.Rajah

No comments:
Post a Comment