குறிப்பு: பிரசுரிப்புக்களுக்கு வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் பூனை முடியை ரசித்து ருசித்து சாப்பிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா(வயது 43). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல பிராணியான பூனையை கொஞ்சி கொண்டிருந்த போது, அதன் முடியை தின்றாராம்.
ருசியாக இருந்ததால், தினமும் சாப்பிட தொடங்கியுள்ளார், பிற்காலத்தில் அதற்கு அடிமையாக மாறிவிட்டாராம்.
ஆயிரக்கணக்கான பூனை முடி உருண்டைகளை வாயில் வைத்து மெதுவாக மென்று சுவைத்துள்ளார். இதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தினமும் காலை நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடி சேகரிப்பேன்.
ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்கும். சிறிது நேரம் வாயில் வைத்து சுவைப்பேன். பிறகு எடுத்து விடுவேன் என்கிறார்[காணொளி ,புகைபடங்கள்,]
0 கருத்துகள்:
Post a Comment