Pages

31 January 2013

தர்ஹாவிற்கு சென்று திரும்பிய போது நேர்ந்த விபத்து


குஜராத்தின் பட்டன் பகுதியில் நேற்றிரவு பக்தர்களை ஏற்றி வந்த வான், அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வானில் வந்த அனைவரும் அருகில் இருந்த தர்ஹாவிற்கு சென்று வழிபாடு செய்து விட்டு வீடு திரும்பிய போது இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment