Search This Blog n

25 February 2013

மேலாடையின்றி முன்னாள் பிரதமரை எதிர்த்த பெண்களால் பரபரப்பு

,,,
இத்தாலியில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்து செக்ஸ் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்த சில்வியோ பெர்லஸ் கோனி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் லுகி பெர்சானி போட்டியிடுகின்றார். தற்போது இத்தாலியின் பொருளாதார நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் மூலம் அமையும் புதிய அரசால் தான் நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தலில் ஓட்டு போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த நிலையில் மிலன் நகரில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் ஓட்டு போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன போது அங்கு ஓட்டு போட முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனியும் வந்திருந்தார். அப்போது, மேலாடை அணியாத 3 பெண்கள் திடீரென அவர் முன்பு ஓடி வந்து நின்றனர். சில்வியோ பெர்லஸ் கோனியே இந்த நாட்டின் பிரதமர் என வாழ்த்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பொலிசார் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண்கள் அமைப்பினர் என தெரிய வந்தது ,{காணொளி}


0 கருத்துகள்:

Post a Comment