Search This Blog n

19 February 2013

பெண்ணை படமெடுத்த வாலிபருக்கு தர்ம அடி,,.



தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த சந்தியா(வயது 21), என்ற ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்திருக்கிறார்.
நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். இதை சந்தியா பார்த்து விட்டு அலற, உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை பொலிஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்
 

0 கருத்துகள்:

Post a Comment