Search This Blog n

12 March 2013

இனப்படுகொலையை கண்டித்து முழு அடைப்பு ?


டெசோ அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இலங்கை அரசின் தமிழ் இன படுகொலை தொடர்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இதையொட்டி காலை 6 மணி முதல் தனியார் பேருந்துகள் புதுவையில் இயங்கவில்லை. இம்மாநிலத்தை பொருத்தவரை தனியார் பேருந்துகளே அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
அதேவேளையில் புதுவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள் இயங்கின. நகரின் முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதிகாலையில் திறக்கப்படும் டீக்கடைகள் கூட திறக்கவில்லை. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லிதோப்பு மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளும் இயங்கவில்லை. டெம்போக்கள் முற்றிலுமாக ஓடவில்லை. அதேவேளையில் ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவர் வருகை குறைவாக இருந்தது.
மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது
 

0 கருத்துகள்:

Post a Comment