Search This Blog n

23 March 2013

இத்தாலிய மாலுமிகள் இந்தியா திரும்பினர்



மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரும் இந்தியாவில் நடக்கும் விசாரணைக்காக இந்தியா சென்றுள்ளனர்.
இத்தாலி தூதர், இந்தியாவில் இருந்து வெளியேறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும் இத்தாலியின் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து கடந்த 11 நாள்களாக இந்தியா- இத்தாலி இடையே நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
அந்த இருவரும் இந்தியா திரும்ப உச்ச நீதிமன்றம் நேற்று வரை கால அவகாசம் அளித்திருந்தது.
இதையடுத்து கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோனே, மாசிமிலானோ லடோர் இருவரும் இத்தாலி நாட்டு ராணுவ விமானத்தில் டெல்லி சென்றுள்ளனர்.
அவர்களுடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஸ்டீபன் டி மிஸ்டுராவும் வந்துள்ளார்.
 

0 கருத்துகள்:

Post a Comment