Search This Blog n

03 March 2013

பிரெஞ்சு படைகள்: முக்கிய ஜிகாதி சுட்டுகொலை



மாலி நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அந்நாட்டின் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக பெரும் கலகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரெஞ்சு படைகள் களமிறங்கியது.
இந்நிலையில் சாட் ராணுவம் நேற்று இபோகஸ் மலையிலுள்ள அல்கொய்தா ஜிகாதிகளின் முக்கிய இடமான அட்ரார் பகுதியைத் தாக்கியபொழுது இதில் அவர்களின் கொமாண்டர் மொக்டார் பெல்மொக்டார் உள்ளிட்ட பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சாட் ராணுவம் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
இவர் உலக அளவில் தேடப்பட்டு வந்த முக்கிய ஜிகாதி என்றும் இவரின் இறப்பு அல்கொய்தாவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மாலியில் உள்ள பிரெஞ்சு படைகளுக்கு உதவ மேற்கு ஆப்ரிக்க நாடுகளும், சாட் நாடும் இணைந்து 1000 போர் வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment