Search This Blog n

31 March 2013

புகார்: மாஜி அமைச்சர் கைது ???


வரதட்சணைப் புகாரில் சிக்கியதால், தலைமறைவாக இருந்த ஒடிசா மாநில முன்னாள் சட்ட அமைச்சர் ரகுநாத் மொஹந்தி, இன்று கைது செய்யப்பட்டார்.
அவருடன் இருந்த மனைவி ப்ரீத்தி லதாவை, ஒடிசா காவல்துறையின் மனித உரிமை பாதுகாப்பு குழு கைது செய்தது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரகுநாத் மொஹந்தியின், மருமகள் பர்சா ஸ்வோனி, தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து மொஹந்தியின் மகன் ராஜாஸ்ரீ, கட்டாக் நகரில் கைது செய்யப்பட்டார்.
புகாரில் சிக்கியதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரகுநாத் மொஹந்தி, பின்னர் தலைமறைவானார்.
இதே விவகாரம் தொடர்பாக ரகுநாத் மொஹந்தியின் மகள் ரூபா ஸ்ரீ மற்றும் மருமகன் ஆகியோர் பெயரும் புகாரில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரகுநாத் மொஹந்தி இன்று மேற்குவங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஷாலிமாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

0 கருத்துகள்:

Post a Comment