Search This Blog n

27 March 2013

ஜெயலலிதாவுக்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை


முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று விடுத்த கோரிக்கையால், அவரது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகும் என என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
ஜெயலலிதாவின் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான இந்தக் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி நீக்கச் செய்யலாம் என்று எச்சரித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

Post a Comment