Search This Blog n

07 March 2013

கதிர் வீச்சு ஏற்பட வில்லை: இலங்கைக்கு ???


கூடங்குளம் அணு உலையில் கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள இந்தியா தூதரகம் மறுத்துள்ளது.
கூடங்குளம் அணு உலை அதி நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரிசோதனைகள் அனைத்தும் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனை முடிவுகளை அணுசக்தி ஒழுங்கு முறை வாரிய குழு தினமும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விடயங்களில் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அறிவுறுத்தியுள்ள படியே அடுத்தகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணு பிளவு பணிகளும், மின் உற்பத்தியும் தொடங்கப்படாத நிலையில், கதிர் வீச்சுக்கு வாய்ப்புகளே இல்லை என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய உறவு கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற தகவல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கூறியுள்ளது
 

0 கருத்துகள்:

Post a Comment