Search This Blog n

07 March 2013

மாலிப்போரில் நான்காவது பிரெஞ்சு வீரர் மரணம்


மாலியின் இசுலாமியவாதிகளை அகற்றும் போரில் அந்நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் ஒரு வீரர் நேற்று வீரமரணம் அடைந்துள்ளார்.
பிரான்சு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வால்போன்(Valbonne) என்ற இடத்தில் முகாமிட்டிருந்த ராணுவப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கிழக்குமாலியில் காஓ நகருக்கு 100 கிலோ மீற்றர் தொலைவில் நடந்த போரில் உயிரழந்தார் என்பதைத் தெரிவித்துள்ளது.
வீரமரணம் அடைந்தவரின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஜனாதிபதி ஹோலாண்ட் தலைவணங்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாலியில் நடந்த போரில் இதுவரை பிரெஞ்சு வீரர்கள் நான்கு பேர் தம் இன்னுயிர் ஈந்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று வடக்குமாலியில் உள்ள இஃபோகாஸ்(Ifoghas) மலையிலிருந்து வந்த தீவிரவாதிகளால் ஒரு பிரெஞ்சு வீரர் கொல்லப்பட்டார்.
இதை தொடர்ந்து பாரசூட் படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொருவர் பெப்ரவரி மாதம் 19ம் திகதி அன்று நடந்த கடுமையான மோதலில் உயிரிழந்துள்ளார். மேலும் இம்மோதல் தொடங்கியவுடனேயே ஹெலிகொப்டர் ஓட்டுநர் கொல்லப்பட்டுள்ளார்.
தற்பொழுது நான்காவதாக நேற்று ஒருவர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளார்.
பிரெஞ்சுப்படைகள் வடக்கு மாலியின் முக்கிய நகரங்களிலிருந்து இசுலாமியவாதிகளை விரட்டியடிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாகப் போர் நடத்தி வருகின்றனர்.

மேலும் மலைப்பகுதிகளில் மறைந்துவாழும் போராளிகளை வேட்டையாடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment