Search This Blog n

23 March 2013

விமானத்தின் இரண்டு டயர்கள் பஞ்சர்:உயிர் ???


அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த விமானத்தின் இரண்டு டயர்கள் பஞ்சர் ஆன சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் இருந்து இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம், 90 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒன்று, அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த விமானம் திப்ருகர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இரண்டு டயர்கள் பஞ்சர் ஆகிவிட்டன. ஆனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திப்ருகர் விமான நிலையத்தில் டயர்களை ரிப்பேர் பார்க்கும் வசதி இல்லை. இதனால் கொல்கத்தாவில் இருந்து பொறியாளர்கள் மற்றொரு விமானத்தில் வந்து சரி செய்தனர்.
எனவே, விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக திப்ருகரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
 

0 கருத்துகள்:

Post a Comment