Search This Blog n

23 March 2013

பீடாதிபதியாக ஜயேந்திரர் பதவியேற்ற வைர ?


காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவியேற்ற 60வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
இவர் கடந்த 1954ம் ஆண்டு மார்ச் 22ம் திகதி காஞ்சிபுரத்தில் உள்ள சர்வதீர்த்த குளத்தின் அருகே துறவறம் பூண்டார்.
அப்போது பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இவருக்கு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டி காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியாக அறிவித்தார்.
இந்நிலையில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதியாக பதவியேற்று 60வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு சங்கர மடத்தில் நேற்று பீடாரோஹன வஜ்ர மஹோத்ஸவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை காமாட்சியம்மன் கோயிலிலும், கோயில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் ஆலயத்திலும் நடந்த சிறப்புப் பூஜையில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கு பெற்றனர்
 

0 கருத்துகள்:

Post a Comment