Search This Blog n

23 March 2013

அவதூறாக தகவல் வெளியிட்டவர் மீது ?


மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூறாக முகநூலில்(பேஸ்புக்) காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தகவல் வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி தோழன்பட்டியைச் சேர்ந்த பாலையா என்பவரின் மகன் மனோஜ்(வயது 27), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரகாகரன், அரை நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்ணை பிடிப்பது போல சித்தரித்த படத்தையும் அதை விளக்கி சில வாசகங்களையும் பேஸ்புக்கில் மார்ச் 22ம் திகதி இரவு வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு வெளியிட்டிருப்பது தமிழினத்தையும், தமிழர்களையும் அவமதிப்பதாகும். இத்தகைய செயலில் ஈடுபட்ட மனோஜ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம்தமிழர் கட்சியின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைப்பாண்டியன், நிர்வாகிகள் தரணிரமேஷ், சட்டத்தரனி போத்தியப்பன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வடகாடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment