Search This Blog n

06 April 2013

மருமகனின் மோசடிகள்: அம்பலப்படுத்திய அதிகாரி


44வது முறையாக இடமாற்றம்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலமோசடியை அம்பலப்படுத்தி அரசியல் புயலை உருவாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி 44 வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா என்பவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, கடந்த வருடம் ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டிஎல்ப் நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார் என்று முறைப்பாடுகள் எழுந்தன.
இது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது. விவசாயிகளிடம் நிலம் பலவந்தமாக பறிக்கப்பட்டது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து வந்ததால் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா, அப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஓராண்டுக்குள் 3 முறை வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடைசியாக ஹரியானா விதை அபிவிருத்தி கழகத்தில் நிர்வாக மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். அங்கும் கேம்கா சும்மா இருக்கவில்லையே..விதை கொள்முதல் ஊழலை வெளிக்கொண்டு வந்து சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார்.
மேலும் இது தொடர்பான பொதுநலன் வழக்கு ஒன்றில் ஏப்ரல் 12ம் திகதிக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
நிச்சயம் அரசுக்கு எதிராகத்தான் கேம்கா அறிக்கை தாக்கல் செய்வார் என்று எண்ணியதால் அவரை திடீரென தொல்லியல் துறைக்கு கேம்கா டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்.
அவரது 20 வருட அரசுப் பணி காலத்தில் இது 44-வது பணியிட மாற்றம் என தெரிவிக்கப்படுகிறது

 

0 கருத்துகள்:

Post a Comment