This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 May 2013

தேர்வில் முதல் இடத்தை 9 மாணவிகள்??


தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது.
அதே போன்று, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் யூன் 20ம் திகதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
 

25 May 2013

திரு,டி.எம்.செளந்தரராஜன் காலமானார்,

 
மிழ் திரையுலகின் பிபரல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 91. சுவாசக் கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிறபகல் 3.50 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. 1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தார் செளாந்தர ராஜன். திருவிளையாடல், பலே பாண்டியா, அம்பிகாபதி, பாசமலர், பச்சைவிளக்கு, மலைக்கள்ளன், நாடோடி மன்னன், பறக்கும் பாவை, ஆயிரத்தில் ஒருவன், பாகப் பிரிவினை, வசந்த மாளிகை, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்களில் பாடியிருக்கிறார்,எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு நாளை (26.05.13) நடைபெறுகிறது இசை மேதைக்கு எமது இறுதி வணக்கங்கள்

மேயரை சந்திக்க முடியாது: செக்ஸ் அடிமைகள் ?


போரின் போது களைப்படைந்த வீரர்களுக்கு பெண் செக்ஸ் அடிமைகள் தேவை என்று ஜப்பானின் ஒசாகா நகர மேயர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகர மேயராக இருப்பவர் டோரு ஹஷிமோடோ, மறு சீரமைப்பு கட்சியைச் சேர்ந்தவர்.
இவர், போரின் போது தென் கொரியாவைச் சேர்ந்த பெண்கள் பலரை செக்ஸ் அடிமைகளாக, ஜப்பான் இராணுவத்தினர் வைத்திருந்த தகவலை பெருமையாக குறிப்பிட்டார்.
இதற்கு தென் கொரியாவைச் சேர்ந்த அப்போதைய செக்ஸ் அடிமைப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இப்போது, 85 வயதாகும் இரு முன்னாள் செக்ஸ் அடிமை பெண்களை சந்திக்க, மேயர் டோரு ஹஷிமோடோ விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் மேயரை சந்திக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பெண்களை போகப் பொருளாக கருதும் மேயருடன், நாங்கள் எவ்வித சந்திப்பையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
 

24 May 2013

56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள்

சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகிறார்கள் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இன்று சவுதி செல்லும் சல்மான் குர்ஷித், டெல்லியில் நேற்று உருது பத்திரிகை ஆசியர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் பேசியதாவது:
சவுதியில் இருந்து இன்னும் 1 1/2 மாதத்தில் 56,700 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புகின்றனர். இவர்களிடம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என இவர்கள் அனைவரும் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.
இவர்களின் சொந்த மாவட்டத்தின் அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஆவணங்களை பெற வேண்டியுள்ளது. அவற்றை சரிபார்க்க கூடுதலாக 10 அதிகாரிகள் இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சவுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் இந்தியர்கள் தன்னார்வ தொண்டர்களாக தாயகம் திரும்ப விரும்பும் இந்திய தொழிலாளர்களின் மனுக்களை பரிசீலித்து வருகின்றனர்

துப்பாக்கியுடன் சினிமா பைனான்சியர் /


 சென்னை கீழ்ப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் விஜயகர் துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்து 10 மணி நேரம் பொதுமக்களையும், பொலிஸாரையும் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளார்.
 சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சப்த மாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விஜயகர், கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால், கோபமடைந்த வீட்டு உரிமையாளரும், குடியிருப்பு வளாக நல சங்கத்தினரும் விஜயகரை, வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு குடியிருப்போர் நல சங்க அலுவலகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த விஜயகர், தன்னால் எந்த பிரச்சினையும் இல்லை என கடிதம் எழுதி தருமாறு மிரட்டியுள்ளார்.
அத்துடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேல் நோக்கிசுட்டதுடன், அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு தன் வீட்டுக்கு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்.
இதுகுறித்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் குவிந்தனர்.
தன் வீட்டில் இருந்த பெண்ணை, துப்பாக்கியால் சுட்டு விடுவதாக விஜயகர் பொலிஸாரை மிரட்டினார். தனது வீட்டைவிட்டு காரில் பெண்ணுடன் தப்ப முயன்ற விஜயகரை பொதுமக்கள் சரமாரியாக அடித்துப் பிடித்தனர். காலை 11:00 மணிக்கு ஆரம்பமான இந்த மிரட்டல் இரவு 9:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
விஜயகரைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தியபோது அவர் ஒன்றரை வருடமாக மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்களும் அதனை உறுதி செய்தனர்.
இதையடுத்து, எழும்பூர் 13வது நீதவான் சிவசுப்பிரமணியன் முன்னிலையில், அவரை ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு பொலிஸார் அழைத்து சென்றனர். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவரை சிறையில் அனுமதிக்க முடியாது என சிறைத் துறையினர் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, நீதவானின் உத்தரவுபடி, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் விஜயகரை பொலிஸார் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 

என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல்"


என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.
அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி பூசலை தவிர்த்து, ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளையும், மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என ராகுல் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர், நான் அப்படி அல்ல. கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு ??


 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரபலமான பெண் அழகுக் கலை நிபுணரும், தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது. அக்கொலை வழக்கில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூருக்கு அருகில் பான்டிங் பகுதியில் வழக்கறிஞர் பத்மநாபனுக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் திகதி சோசிலாவதி நில விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தனது வழக்கறிஞர் அகமது கமீல் கரீம், வங்கி அதிகாரியான நூரிஷாம் முகம்மது மற்றும் கார் டிரைவர் ஆகியோருடன் போயிருந்தார்.
ஆனால் நான்கு பேரும் பத்மநாபனின் பண்ணை வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டனர். இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நான்கு பேரின் எலும்புக் கூடுகளும் பத்மநாபனின் பண்ணைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு, பத்மநாபன் உட்பட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நில விவகாரம் தொடர்பாக நான்கு பேரையும் பத்மநாபன் கும்பல் கொலை செய்தது பின்னர் தெரிய வந்தது.
இதுதொடர்பாக நீதிபதி ததுக் அக்தர் தஹிர் அளித்த தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பத்மநாபன் (43வயது), மற்றும் அவரது பண்ணை வேலையாட்களான தில்லையழகன், மதன், காத்தவராயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை என்பதற்காக குற்றவாளிகள் 4 பேரையும் தண்டிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த கொலையை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாகவும் அறிவித்தார்
 

23 May 2013

குறுவைச் சாகுபடி பொய்க்கும் அபாயஎச்சரிக்கை

காவிரி டெல்டா பகுதிகுகளில் இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி பொய்க்கக்கூடிய சூழல் நிலவுவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர்களிடம் கேட்டால், சந்தையில் விலை உயர்ந்தால்தான் வீட்டில் யாரும் சமைக்காமல் அம்மா உணவகங்களில் சாப்பிட வருவார்கள் என்று கூறுவர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசுப் பஸ்களில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் இதுவரை முதியோர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

110-வது விதியின் கீழ் 100-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா படித்துள்ளார். அதில்கூட முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு இல்லை.

திமுக மீதான காழ்ப்புணர்வின் காரணமாக இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தையே அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

2006-2011 வரையான திமுக ஆட்சியில் ரூ.3,907 கோடியில் 1.65 கோடி வண்ணத் தொலைக்காட்சிகள் கொள்முதல் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டன.

அதில் 2011 மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் 1.27 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டன.

அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் மையங்களுக்கு வழங்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்து அரசாணையும் பிறப்பித்தது.

ஆனால் அவற்றை வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் மதிப்பு ரூ.22.82 கோடியாகும்.

திமுக ஆட்சியில் 2006-11-ஆம் ஆண்டு வரை குறுவைப் பயிரும், சம்பா பயிரும் பொய்த்ததில்லை. ஆனால் தற்போதைய ஆட்சியில் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துபோய் உள்ளதால் சாகுபடிக்கு அணையை திறந்துவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆனால் ஆட்சியாளர்களோ காவிரி வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்

பல்கலைக்கழக புதிய துணைவேந்தர்

                             
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.ராஜாராம் (55) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக இவர் பணிபுரிந்துள்ளார்.
 கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், கம்ப்யூட்டர் மொழிகள், ஹை வோல்டேஜ் என்ஜினீயரிங் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவரது கட்டுரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன,இதற்கான உத்தரவு வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் பேராசிரியராக இருக்கிறார். ஓரிரு நாள்களில் அவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டிசம்பர் 31, 2010 முதல் ஜூலை 31, 2012 வரை இருந்துள்ளார். கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஓருங்கிணைக்கப்பட்டவுடன் இவர் கோவையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
தாற்காலிக துணைவேந்தர்...ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தாற்காலிக துணைவேந்தராக மூத்தப் பேராசிரியர் காளிராஜ் நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பருடன்
காளிராஜ் ஓய்வு பெற்றாலும், அவருக்கு மே 31 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க முன்னாள் துணைவேந்தர் எஸ்.சச்சிதானந்தம் தலைமையில் மூவர் குழு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் வந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து மூவர் கொண்ட பட்டியலை ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு அண்மையில் பரிந்துரைத்தது.
பி.இ. கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் முழுநேர துணைவேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தராக நியமன உத்தரவு வெளியான நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் ராஜாராம் செயல்படுவார்.

22 May 2013

அடுத்த மாதம் மினி பஸ்கள் ஓடும் ,,அடுத்த மாதம் மினி பஸ்கள் ஓடும் தகவல்

சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு மினி பஸ் விடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
 இதையொட்டி முதலில் 100 மினி பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மினி பஸ்களை கட்டமைப்பதற்கான நிறுவனத்தை ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யும் பணியை சாலைப் போக்குவரத்து நிறுவனம் (ஐஆர்.டி.) மேற்கொண்டது.
இதன் அடிப்படையில் மினி பஸ்களுக்கான 'சேசிஸ்' தயாரிக்கும் ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் இப்போது, மினி பஸ் சேசிஸ்களை தயாரித்து மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்த சேசிஸ்களுக்கு பாடி கட்டும் பணி கரூரில் நடந்து வருகிறது.
 இதுபற்றி போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறியதாவது:-
சென்னையில் மினி பஸ்களை இயக்க அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தந்துள்ள பஸ்களுக்கு பாடிகட்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை 30 பஸ்களுக்கு பாடிகட்டப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 20-ந்தேதிக்குள் இதற்கான பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்து விடும்.
எனவே அடுத்த மாத இறுதியில் சென்னையில் மினி பஸ்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார். இந்த மினி பஸ்களுக்கான கட்டணமும் குறைவாகவே இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்படும் 

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ?? :


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 4 ஆண்டுகள் நிறைவையொட்டி பாராளுமன்ற பொது விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 தேர்தல் எப்போது நடைபெற வேண்டுமோ அப்போது நடைபெறும். தற்போதைய சூழ்நிலையில், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்தவும் எந்தத் தேவையும் எழவில்லை. கூட்டணிக் கட்சியினர் சொல்வதை எல்லாம் அரசால் செய்ய இயலாமல் போகலாம். மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களை மையப்படுத்தியே பிரச்னைகளைப் பார்க்கின்றன. அந்த அரசுகள் தேசிய சிந்தனையில் அணுக வேண்டும்.
 கடந்த 9 ஆண்டுகளில் சோனியா காந்திக்கும் மன்மோகனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. இதேபோல் சமீபத்தில் பதவி நீக்கப்பட்ட இரண்டு மத்திய மந்திரிகள் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சோனியாவும் பிரதமரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தனர். வரும் தேர்தலில் அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
 கட்சியினரும் அனைத்துத் தரப்பினரும் தன்னைச் சுட்டிக் காட்டி கூறுவதை ராகுல் காந்தி காது கொடுத்துக் கேட்பார் என்று நினைக்கிறேன். அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்.,.-,
 

தமிழர் பிரச்சினையை முன்வைத்து சில கட்சிகள் அரசியல் பிழைப்பு

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு மத்திய மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-
ராஜீவ்காந்தி நம்மோடு இருந்திருந்தால் இந்தியா சீனாவை தாண்டி வளர்ச்சி பெற்று இருக்கும். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தினார். அனைத்து கட்சிகள் வித்தியாசமின்றி வரவேற்று கைதட்டினார்கள். துரதிர்ஷ்டவமாக அவரை இழந்து விட்டோம்.பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்தது அவர்தான். இதன் மூலம் 30 லட்சம் பெண்கள் உள்ளாட்சி பதவிகள் வகிக்கிறார்கள். வருங்காலத்தில் உள்ளாட்சியில் 5 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து ராஜீவ் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் சில கட்சிகள் தவறான பிரசாரம் செய்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இந்த கட்சிகள் என்ன உதவி செய்திருக்கிறது? தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள். இந்த அகதிகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது.

2009-ம் ஆண்டு போருக்கு பிறகு இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கல்வி, சுகாதாரம், மின்சார உற்பத்தி, ரெயில் பாதை அமைப்பது, குடிநீர் வசதி, வீட்டு வசதி ஆகியவற்றுக்காக ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் களை மத்திய அரசுதான் வாரி வழங்கி இருக்கிறது. இந்த திட்டங்களை செயல் படுத்துவதற்கு இலங்கை அரசு கால தாமதம் செய்த போது மத்திய அரசு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் இலங்கைக்கு அனுப்பி திட்டங்களை தீவிரப்படுத்தியது. இவற்றையெல்லாம் மறைத்து விட்டு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு காங்கிரசை தவிர வேறு எந்த கட்சியும் எதையும் செய்திருக்க முடியாது. காங்கிரசார் வாய்மூடி மவுனமாக இருப்பதால்தான் இந்த கட்சிகள் மக்களிடம் தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். எனவே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவியை விளக்க வேண்டும்

21 May 2013

கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை


பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர்.
குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் விவாகரத்தான இவருக்கு குழந்தைகளிடமும் அன்பாக இருக்கத் தெரியவில்லை. எனவே நீதிமன்றம் இவரை வேறொருவர் முன்னிலையில் தான் தன் குழந்தைகளைப் பார்த்துப் பேச வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் மனம் வெறுத்துப் போன தந்தை யாரும் அறியாமல் குழந்தைகளைத் தனது வீட்டிற்க்குக் கொண்டு வந்து கழுத்தை அறுத்து கொலைச் செய்துள்ளார்.
தனது குற்றத்தைப் பொலிசாரிடம் ஒத்துக்கொண்ட இந்தத் தந்தை கொலைக்கான நோக்கம் எதையும் விவரிக்கவில்லை. இவர் குழந்தைகளைக் கொல்லப் பயன்படுத்திய கத்தியை பொலிசார் கைப்பற்றினர்.
கொலை செய்து விட்டு வெளியே வந்த இவர் தன் மனைவியைப் பார்த்ததும் காலில் ரோலர் ஸ்கேட்ஸைப் பொருத்திக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
அவர் உடையில் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்த அவரது மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டான் என்று கூறி கதறியழுதார். உடனே மனநல மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
 

20 May 2013

4 1/2 கோடி ரூபா வைரம் திருட்டு : மும்பை விமான.,.


மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபார நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை பட்டை தீட்டுவதற்காக பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பி வைத்தது.
24 பொட்டலங்களாக தனியார் கொரியர் மூலம் அனுப்பப்பட்ட வைரம் மும்பையில் இருந்து விமானத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது, விமான நிலையத்தில் சரக்குகளை அடையாளம் தெரியாத ஒருவர், யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு வைர பொட்டலத்தை திருடிச் சென்று விட்டார்.
களவுப் போன வைரத்தின் இந்திய மதிப்பு ரூ. 4 1/2 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலை உறுதிப்படுத்த போலீசார் மறுத்து விட்டனர்

புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன ?


பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.
கதிரியக்கத்தின் வாயிலாக கண்டுபிடிக்க முடியாத உள்ளார்ந்த புற்றின் வளர்ச்சியை கூட இந்த அமுலெட் கருவி வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும்.
இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 30 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் இருந்த நவீன கருகி மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
50 மைக்ரான் அளவு கொண்ட துல்லியமான காட்சி தெளிவுடன் இந்த கருவி மார்பக புற்றுநோயை பரிசோதித்து தகவல் அளிக்கும்.
'பியூசி' நிறுவனம் தயாரித்துள்ள இந்த நவீன கருவியில் ஒருமுறை சோதனை செய்து கொள்ள ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கருவியை புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் துவக்கி வைத்த பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "பெருகி வரும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு எல்லா பெண்களுக்கும் ஏற்பட வேண்டும்.
புற்று நோயை கண்டுபிடிக்கவும் அதை எதிர்த்து போராடவும் எல்லா பெண்களும் இந்த நவீன பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம ,,,,


திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 திரிபுராவில் உள்ள அகர்தலா நகரில் 'தைனிக் ஞானதூத்' என்ற நாளிதழ் அலுவலகம் உள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தரை தளத்தில் பணியிலிருந்த 'புரூஃப் ரீடர்' மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இச்சம்பவத்தை பார்த்த நிருபர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் முதல் மாடிக்கு சென்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் மாடியில் அலுவலக மேனேஜர் மட்டும் தனியாக இருந்தார். கத்தியுடன் மர்ம நபர்கள் பாய்ந்தோடி வருவதை கண்ட மேனேஜர் தப்பியோட முயன்றார்.
அவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக கத்தியால் குத்திய மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடினர்.
கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புரூப் ரீடர் சுஜித் பட்டாச்சார்யா (32), அலுவலக டிரைவர் பல்ராம் கோஷ் (40), மேனேஜர் ரஞ்சித் சவுத்ரி (60) ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்

ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த?


ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 3 வீரர்களையும் டெல்லி பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் 3 வீரர்களையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி ரவிசவானி தலைமையிலான விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் 3 வீரர்கள் மீதும் இறுதிக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பொலிசில் கிரிமினல் புகாரும் அளித்து உள்ளது.
இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கப்டன் ராகுல் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டால் டிராவிட் அதிருப்தி அடைந்து இருந்தார். இதனால் கடந்த 9-ம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதை விரும்பவில்லை. எப்படியோ அந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுவிட்டார்.
அந்த ஆட்டத்தில்தான் அவர் தனது 2-வது ஓவரில் 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக ஸ்ரீசாந்த் ரூ.40 லட்சம் பணத்தை சூதாட்ட தரகரிடம் பெற்று இருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு ராஜஸ்தான் ஆடிய சென்னை (12ம் திகதி), மும்பை (15ம் திகதி) அணிகளுக்கு எதிராக ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. மும்பையுடன் மோதிய ஆட்டத்துக்கு மறுநாள்தான் (16ம் திகதி) ஸ்பாட் பிக்சிங் வழக்கில் ஸ்ரீசாந்த் கைதானார்.
மேலும் ஸ்ரீசாந்த் அணியில் இருந்து கடந்த 12-ம் திகதியே கழற்றி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சண்டித்தனம் அதிகரித்ததால் சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு வீரர்கள் தங்கி இருந்த ஓட்டலை விட்டு வெளியேறுமாறு அணி நிர்வாகம் அவரை கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்துதான் அவரை கேப்டன் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணி நிர்வாகி ஒருவர் இதை மறுத்துள்ளார்.
அவர் கூறும்போது மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டதற்கும், ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் ஸ்பாட் பிக்சிங் சந்தேகம் எதுவுமில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு. ஸ்பாட்பிக்சிங் நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்றார்
 

19 May 2013

புதிய அமைச்சர்களாக 28 பேர் பதவி ஏற்றனர்,,

 
கர்நாடக சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மையாக காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையா கடந்த 12ஆம் தேதி பதவி ஏற்றார். அப்போது அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பிறகே அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கபப்ட்டது.
அதன்படி, அமைச்சர்கள் படியலுக்கு சோனியா காந்தி அனுமதி அளித்தப் பிறகு பெங்களூர் திரும்பிய, சித்தராமையா அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தார். கர்நாடகாவில் அதிபட்சமாக முதல்வர் உள்பட 34 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முடியும். ஆனால், 28 அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு அமைச்சர் சபை விஸ்தரிக்கப்பட்டது.
புதிய அமைச்சர்கள் 28 பேரும் இன்று காலை பதவி ஏற்றனர். கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா காலை 10.30 மணிக்கு தொடங்கியது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதியும் செய்து வைத்தார். 20 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 8 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
11.15 மணிக்கு பதவி ஏற்பு விழா முடிவடைந்தது. விழாவில் முதல்வர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு இன்று மாலை இலாகா ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. நடிகர் அம்பரிஷ் கேபினட் அமைச்சராகவும், நடிகை உமாஸ்ரீ இணை அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
இன்று பதவி ஏற்ற கேபினட் அமைச்சர்கள் விபரம் வருமாறு:
ஆர்.வி.தேஜ்பாண்டே, ராமலிங்க ரெட்டி, டி.பி.ஜெயச்சந்திரா, உமர்- உல்-இஸ்லாம், பிரகாஷ் ஹுக்கேரி, எச்.கே. பாட்டில், சாமனூர் சிவசங்கரப்பா, ஸ்ரீனிவாஸ் பிரசாத், ராமநாத் ராய், டாக்டர் மகாதேவப்பா, நடிகர் அம்ரிஷ், எச்.எஸ்.மகாதேவ பிரசாத், கே.ஜே. ஜார்ஜ், வினய் குமார் சரக், பாபுராவ் சின்சனசூர், சதீஷ் சார்க்கிஹோலி, ஆஞ்சநேயா, சிவராஜ் எஸ். தங்கடகி, எம்.பி. பாட்டில்.
இணை அமைச்சர்கள்:
தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பேரேகவுடா, சரண பிரகாஷ்பாட்டில், அபய் சந்திர ஜெயின், நடிகை உமாஸ்ரீ, சந்தோஷ்லட், பரமேஸ்வரர் நாயக், கிம்னே ரத்னகர்.
இன்னும் 5 மந்திரிகள் பதவி நிரப்பப்பட வேண்டும். மூத்த தலைவர்களுக்கு அப்பதவி வழங்கப்படும் என்றும், அவர்கள் ஊழல் புகாரில் சிக்கி இருப்பதால் பெயர் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

தமிழர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்

 
 நாம் தமிழர் கடலூரில் நடத்தும் பொது கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிராபாகரன் படத்தைப் பயன்படுத்தியதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால், இந்த கூட்டத்தை உள்ளரங்கில் வைத்து நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்தது. அதன்படி தடை கடலூரில் சிதம்பரம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ளரங்கு மாநாடாக இதனை நடத்துகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்தக் கூட்டம் தற்போது திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது

17 May 2013

மதுபான கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்


குடிகார கணவர்களின் தொல்லை தாங்காத பெண்கள் மதுபான கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜரகா பஜார் என்ற கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் ஊரிலும், அருகேயுள்ள பகுதிகளிலும் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர், பொலிஸ் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரிடமும் மனுக் கொடுத்தனர். அதற்கு எந்த பலனும் இல்லை.
இந்நிலையில், ஜரகா பஜார் கிராமத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் உட்பட, ஏராளமான பெண்கள் தங்கள் ஊரில் உள்ள மதுபான கடையை நேற்று முற்றுகையிட்டனர்.
அங்கு பணியிலிருந்த ஊழியர்களை வெளியேறும்படி கூறிய அவர்கள், கம்பு, கட்டைகளுடன் மதுபான கடைக்குள் நுழைந்து அடித்து நொறுக்கினர். மதுபாட்டில்கள் அனைத்தையும் உடைத்தனர். கடையை துவம்சம் செய்த பின், அனைவரும் வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக கடையை உடைப்பதில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறியதாவது: எங்கள் கிராமத்திலும், அருகேயுள்ள பகுதிகளிலும் மதுபான கடைகள் செயல்படுவதால் என் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை அடிக்கிறார்.
வருமானத்தில் பெரும்பகுதியை, என் கணவர் மதுவுக்கே செலவிடுகிறார். அதனால் குடும்பம் பட்டினியால் வாட நேரிடுகிறது.
என்னைப் போல கிராமத்திலுள்ள வேறு பல பெண்களும் துயரத்தை அனுபவிப்பதால், நிர்வாகத்தினருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக நாங்களே சட்டத்தை கையில் எடுத்துச் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்

குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்


மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு குப்பைத் தொட்டியில், மாநகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை லொறியில் ஏற்றி கொண்டு செல்வது வழக்கம்.
இன்று காலை 9.40 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் மர்ம ஆசாமிகள் யாரோ வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இவ்வெடிப்புச் சம்பவத்தால் இரும்பு குப்பைத் தொட்டி துண்டு துண்டாக சிதறி பறந்தன. இதில் அந்த வழியாக சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குப்பைத் தொட்டியில் வெடித்த குண்டு எத்தகைய சக்தி வாய்ந்த குண்டு எனவும் அதனை குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்தது யார்? எனவும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே மதுரை நகர காவல்நிலையத்திற்கு மதுரையில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் என்று மர்ம தொலைபேசி வந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து, நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் குப்பைத் தொட்டியில் கிடந்த குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா


இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
அதனால் இந்திய விமானப் படையின் புதிய விமான தளம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரும் 27ம் திகதி நடைபெறுகிறது.
ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார்.
இப்போது திறக்கப்பட்டாலும் இந்த விமான தளம் முழு அளவில் தயாராக 5 ஆண்டுகளாகும்.
தஞ்சாவூர் விமானப்படை தளம் முழு அளவில் தயாரானவுடன் 16 முதல் 18 சூப்பர் சானிக், சுகோய் விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று விமானப் படையின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் வடக்கு பகுதியில், எப்போதும் ராணுவத்தின் கண்காணிப்பும், பலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தென்பகுதி கடல் சூழ்ந்த பகுதி. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
சீன கடற்படையின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பின்னணியில் தான், தஞ்சாவூரில் புதிய விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானதள கட்டுப்பாட்டு அறையும் தயாராகியுள்ளது. விமானப்படை தளத்தைச் சுற்றிலும், வேலி கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஒன்றுக்கும் மேற்பட்ட காஸ் இணைப்பு:


ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு ஜூன் 1ம் திகதியில் இருந்து சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்களில் உண்மையான வாடிக்கையாளர்களை கண்டறிய, "உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்” என்ற கே.ஒய்.சி நடைமுறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின.
இதன்படி காஸ் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் காஸ் இணைப்பு தொடர்பாக அனைத்து விபரங்களையும் அளிக்கும்படி கோரப்பட்டு இருந்தது.
இதற்காக காஸ் விநியோகிப்பாளர்கள் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தராதவர்களின் காஸ் இணைப்புகளை வரும் ஜூன் 1ம் திகதியில் இருந்து துண்டிக்கப்படுகிறது.
இவர்களுக்கு காஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட மாட்டாது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் கே.ஓய்.சி விண்ணப்பம் கொடுக்காத 63 லட்சம் இணைப்புகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரே இடத்தில் பல்வேறு இணைப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
இவர்கள் உடனடியாக தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணம், குடியிருக்கும் முகவரிக்கான சான்று ஆகியவற்றை கே.ஓய்.சி விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை வழங்காதவர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யப்படுவது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

15 May 2013

புதை மணலில் சிக்கி 2 இந்தியர் பலி..!


அபுதாபியில் உள்ள அல் ஜப்ரானியா பகுதியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த ராம்குமார் (35), செல்வராஜ்(28) ஆகியோர் அப்பகுதியில் உள்ள புதை மணலில் சிக்கி புதையுண்டனர்.
மற்ற தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அல் மக்காம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு படையினர் வந்து புதையுண்டவர்களை மீட்பதற்குள் ராம்குமார், செல்வராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதை கட்டுமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அபுதாபி மீட்பு துறை உயரதிகாரி இபுராகீம் அலி அமேரி கூறினார்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் வீட்டை இழந்த வாலிபர்



 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது.

எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெறும் வீரர்கள் யார், ஒரு அணியின் ஸ்கோர், வீரர்களின் சிக்சர், கைப்பற்றும் விக்கெட் என்று பல்வேறு வகையில் ஐ.பி.எல். பெட்டிங் (பந்தயம்) நடக்கிறது.
பணம் வைத்து நடத்தப் படும் இந்த பெட்டிங்குக்கு இநதியாவில் அனுமதி கிடையாது. சட்ட விரோதமாக இது நடத்தப்படுகிறது. மும்பையில்தான் அதிக அளவில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஐ.பி.எல். பெட்டிங்கில் ஈடுபடுகிறார்கள்.
மிகப் பெரிய அளவில் பணம் கிடைக்கும் என்பதால் இந்த சட்டவிரோத செயல்களை செய்கிறார்கள். இதில் பணத்தை சம்பாதிப்பவர்களும் உண்டு. அதைவிட நஷ்டம் அடைந்தவர்களும் உள்ளனர். ஐ.பி.எல். சூதாட்டத்தில் சவுகார்பேட்டை பகுதியில் சிலர் வீடு, நகையை இழந்து உள்ளனர்.
அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் தங்களது உடமைகளை இழந்து பரிதவித்துள்ளார்கள். 22 வயது வாலிபர் ஒருவர் தனது மனைவியின் நகையை விற்று சூதாட்ட தரகரிடம் பெட்டிங் கட்டி பணத்தை இழந்து உள்ளார்.
அவர் கூறும்போது, 'எனது உறவினர் ஒருவர் கிரிக்கெட் பெட்டிங்கில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். எனது குடும்பத்தினர் செய்யும் செருப்பு வியாபாரத்தில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. சூதாட்டத்தில் ஈடுபட்டு குறைந்த காலத்தில் அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும்.
எனது குடும்பத்தில் நான்தான் பணக்காரராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தற்போது மனைவியின் நகையை இழந்து நஷ்டப்பட்டு உள்ளேன்' என்றார். 27 வயதான வங்கி ஊழியர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்தார்.
அந்த பணத்தை கொடுப்பதற்காக ரூ.40 லட்சம் மதிப்புள்ள தனது வீட்டை விற்றுள்ளார். தற்போது அவர் வாடகை வீடடில் வசித்து வருகிறார். இனி ஒருபோதும் சூதாட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக ஐகோர்ட்டில் புகார் மனு


தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திரைப்பட வளர்ச்சிக்காகவும், திரையரங்க உரிமையாளர்களின் நன்மைக்காகவும் எங்கள் சங்கம் பாடுபட்டு வருகிறது. கமலஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் விஸ்வரூபம் என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை 11-1-2013 அன்று திரையரங்குகளிலும் டி.டி.எச்சிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவதாக கமலஹாசன் அறிவித்தார்.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படம் ரீலிஸ் ஆகும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் முஸ்லீம் அமைப்பினர் எதிர்ப்பால் தமிழக அரசு இப்படத்துக்கு தடை விதித்தது.
இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து தடை நீக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் எங்கள் சங்கத்தின் மீதும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மீதும் இந்திய போட்டி கமிஷனில் புகார் செய்துள்ளது.
அதில் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கமும் தியேட்டர் உரிமையாளர் சங்கமும் விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று இயற்றிய சட்டவிரோத தீர்மானத்தால் படத்தை வெளியிடும் தேதியை தள்ளி வைக்க நிர்பந்திக்கப்பட்டோம் என்று கூறியுள்ளது. நாங்கள் இதுபோல் தீர்மானம் நிறைவேற்றவில்லை.
ஆனால் எங்கள் சங்கத்தின் பதிவு எண்ணை பயன்படுத்தி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதனை எங்களை தவிர யாரும் பயன்படுத்த முடியாது.
எங்கள் பதிவு எண்ணை பயன்படுத்தி மேலும் தீர்மானம் தயாரித்தற்காக ராஜ்கமல் நிறுவனம் மற்றும் கமலஹாசன் ஸ்ரீதர் ராமானுஜம் ஆகியோர் மீது 17-4-2013 அன்று போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெறுகிறது
 

கால் அமுக்க செய்த பள்ளி ஆசிரியர்:


ஜம்மு– காஷ்மீரில் மாணவர்களை கால் அமுக்கச் செய்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கிர்ராம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பஷீர் அகமது பட்.
இவர் நாற்காலியில் அமர்ந்து மாணவர்களை கால் அமுக்கச் செய்து அதில் சுகம் கண்டது தொடர்பான புகைப்படம், சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியானது.
ஆசிரியரின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதற்காக பள்ளி உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து ஆசிரியரை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து ஆசிரியரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட கல்வி அதிகாரி சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கை இரண்டு நாட்களில் கிடைக்கும் என்றும், அதன்பின் ஆசிரியருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்கல்வி அதிகாரி மேலும் கூறினார்
 

3 வயது மகளுடன் வீதியில் வசிக்கும் தந்தை


இந்தியாவை சேர்ந்த நபரொருவர் தன்னுடைய 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட், இவரது மனைவி அனிஷா.
பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார். இதற்கிடையில் பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை வாங்கி தரும் தரகராக சிக்கந்தர் சாம்ராட்டும் பஹ்ரைனில் தங்கி தொழில் செய்து வந்தார்.
திடீரென இவரது தொழில் கூட்டாளி சுமார் 65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்துவிட்டார்.
அதனால் 2010ம் ஆண்டு பிறந்த மகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனது.
இதற்கிடையில், மனைவியின் நர்ஸ் வேலைக்கான ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது.
குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத சாம்ராட், மனைவி- பிள்ளைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட முடிவு செய்தார்.
கடைசி மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்காததால் அவளை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மோசடி செய்த பஹ்ரைன் ஆசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு போட்டு விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.
வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால் பல வக்கீல்கள் இவரது வழக்கில் ஆஜராகாமல் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றனர்.
வீட்டிற்கு வாடகை கொடுக்க கூட பணம் இல்லாத காரணத்தால் 6 மாத காலமாக சரியான உணவு இல்லாமல் பூங்கா, மசூதி, கார் நிறுத்துமிடம் என காலம் கடத்தி வருகிறார்.
 

14 May 2013

சுயமரியாதைக்காக காதலியை இழந்தவன்


 இதுவரையிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வடசென்னை ராயபுரம் பகுதி திமுக பிரதிநிதி வை.நான்குட்டி மகன் கரிகாலன், பிரவிணா திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார்.
அப்போது கருணாநிதி பேசியதாவது, இன்றைக்கு மே 14. இதே நாளில், செப்டம்பரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு என் திருமணம் நடைபெற்றது.
கோபாலபுரம் இல்லத்தில் மாத்திரம் இதுவரை நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு மேற்பட்டிருக்கும்.
நான் வெளியூர்களுக்கு சென்று நடத்தி வைத்த திருமணங்கள், சென்னையில் வேறு பகுதிகளில் நான் நடத்தி வைத்த திருமணங்கள் என்று பார்த்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும்.
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக்கொள்ள யாரும் முன் வர மாட்டார்கள்.
தற்போது அப்படி நடத்திக்கொள்ள முன் வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது.
என்னைப் பொறுத்தவரை 13-9-1944ல் நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நான் காதலித்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் சுயமரியாதை திருமணம்தான் நடத்திக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தேன்.
இதனால் நான் காதலித்த பெண் எனக்குக் கிடைக்காமல் போய் விட்டாள். சுயமரியாதைக் கொள்கைக்காக 1944ம் ஆண்டிலேயே காதலித்த பெண்ணை இழந்தவன் நான்.
இதுவரை இந்த திருமணங்களுக்கு வருகை தந்து வாழ்த்தியவர்கள், கலந்து கொண்டவர்கள் என்ற எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்.
திமுக ஆட்சி அண்ணா தலைமையில் உருவான அந்த ஆண்டே, அண்ணா சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.
நீங்கள் ஒரு சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தமிழர்கள் தமிழ் முறையில் திருமணம் செய்து கொள்வது மாத்திரமல்ல தமிழன், தமிழனாக வாழ தமிழ் மொழியை வளர்க்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
 

கவர்னர் ரோசய்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண்.,


தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பத்மராவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயா விந்தியால், இவர் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பின் பொதுச் செயலராக உள்ளார்.
இந்நிலையில் சிரளா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் கிருஷ்ண மோகன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகிறார், பலரது நிலங்களை அபகரித்து விட்டார்.
தமிழக கவர்னர் ரோசய்யாவின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகிறார் என கடந்த சில தினங்களுக்கு முன் துண்டு பிரசுரங்களை ஜெயா விந்தியால் வினியோகித்தார்.
பின் இந்த விவரங்களை பேஸ்புக்கிலும் வெளியிட்டார்.
ஜெயா விந்தியாவின் இந்தச் செயல் தன்னை மன ரீதியாக பாதித்துள்ளதாகக் கூறி, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் பிரகாசம் மாவட்ட பொலிசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பொலிசார் ஜெயா விந்தியாலை கைது செய்தனர்.
 

பெண் குழந்தையை திருடி விற்ற பெண் ஊழியர் ,.


ஈரோடு மரப்பாலம் அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஹக்கீம் (வயது 34). இவரது மனைவி மும்தாஜ் (29). இந்த தம்பதியினருக்கு அப்துல்ரசீத் (6) என்ற ஒரு மகன் உள்ளான்.
இதற்கிடையே மும்தாஜ் மீண்டும் கர்ப்பிணி ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மும்தாஜ் கடந்த 9-ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
10-ந்தேதி ஆஸ்பத்திரியில் மும்தாஜிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் 'இன்குபேட்டர்' வார்டில் குழந்தை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. குழந்தையின் தாய் மும்தாஜ் 3-வது மாடியில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தாயார் பீபிஜான் மட்டும் குழந்தை அருகில் உட்கார்ந்து கவனித்து வந்தார்.
இதற்கிடையே நேற்று மாலை 3.30 மணிக்கு இன்குபேட்டரில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை தாய் சிகிச்சை பெறும் 3-வது மாடியில் உள்ள வார்டுக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தையை தாய் மும்தாஜ் கொஞ்சி மகிழ்ந்து கவனித்து வந்தார்.
மாலை 4 மணி அளவில் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் போல் வெள்ளை நிற சேலை ஊதா கலர் ஜாக்கெட் அணிந்த ஒரு பெண் அங்கு வந்தார். 'குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் கொண்டு வாருங்கள்' என்று கூறினார்.
மும்தாஜ் நடந்து செல்ல முடியாததால் அவரது தாயார் பீபிஜான் குழந்தையை எடுத்து கொண்டு தடுப்பூசி போடும் இடத்துக்கு சென்றார்.
வயதான அவராலும் நடக்க முடியாததால் அந்த பெண், 'குழந்தையை என்னிடம் கொடுங்கள் இவ்வளவு மெதுவாக நடந்து வந்தால் எப்படி... கொடுங்கள்' என்று கேட்க அவரும் குழந்தையை கொடுத்து உள்ளார்.
குழந்தையை வாங்கி கொண்டு வேகம்... வேகமாக சென்ற பெண் திடீரென மாயமாகி விட்டார். பின்னால் மெதுவாக நடந்து சென்ற பீபிஜான் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரும் உறவினர்களும் ஆஸ்பத்திரி முழுவதும் தேடி பார்த்து விட்டனர். குழந்தையுடன் சென்ற பெண்ணை காணவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் பட்டப்பகலில் நூதனமாக பச்சிளம் குழந்தையை திருடி சென்ற சம்பவம் ஆஸ்பத்திரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துணிகர சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணையை முடுக்கி விட்டனர். குழந்தையை பராமரித்து வந்த பீபிஜான் அந்த பெண் பற்றிய தகவல் குறித்தும் அவர் பேசிய விதம் குறித்தும் அவரது உருவ அமைப்பு குறித்தும் சொன்ன தகவலையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியராக பணிபுரியும் ஜெகதாம்பாள் என்ற பெண்தான் குழந்தையை திருடி சென்றது தெரிய வந்தது. ஜெகதாம்பாள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 10 ஆண்டாக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆகும்.
அதே பகுதியை சேர்ந்த பாங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மேலாளர் ஒருவர் 'தனது மகனுக்கு திருமணமாகி பல வருசம் ஆகியும் குழந்தை கிடையாது. இதனால் பிறந்த குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொடுங்கள். பெற்றோர்களின் ஒப்புதலின் பேரில் குழந்தையை பெற்று கொடுங்கள்' என்று கூறி உள்ளார். அதற்கு ஜெகதாம்பாளும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில்தான் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை ஜெகதாம்பாள் திருடி கவுந்தப்பாடியில் உள்ள ஓய்வு பெற்ற பாங்கி மேலாளரிடம் கொடுத்து உள்ளார். இதற்காக அவரிடம் பேரம் பேசி ரூ.4 லட்சம் வாங்கி உள்ளார். இந்த சம்பவம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் கவுந்தப்பாடியில் இருந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஜெகதாம்பாளிடமிருந்து ரூ.4 லட்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தையை திருடி விற்ற ஆஸ்பத்திரி பெண் ஊழியர் ஜெகதாம்பாளை ஈரோடு மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் குணசேகரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்
 

13 May 2013

ஜெயலலிதா, சோனியா பாதுகாப்பிற்கென சிறப்பு ?


வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்களில் தற்போது 35 பெண் கமாண்டோக்களே உள்ளனர். இவர்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதால் வி.வி.ஐ. பி.க்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சோனியா மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்கும் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சோனியா, பிரியங்காவுக்கு பெண் கமாண்டோக்களை பாதுகாப்பாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களுக்கான பெண்கள் பாதுகாப்பு படையை உருவாக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் இருந்து இதற்கான பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் 5 ஆயிரம் பெண்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் நாடெங்கும் உள்ள விமான நிலையங்களிலும் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களில் விருப்பம் உள்ளவர்கள் தேசிய பாதுகாப்புப் படைக்கு வரலாம் என்று அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 35 வயதுக்குட்பட்ட பெண்களே இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பிறகு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் சோனியா, பிரியங்காவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்பார்கள்.
 

முதல் மந்திரியாக இன்று பதவி ஏற்கவுள்ளார்


கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
கர்நாடகத்தில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மைசூர் மாவட்டம் பிரியபட்டணா தொகுதி நீங்கலாக இதர 223 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா 40 தொகுதிகளிலும், கர்நாடக ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் பரத்வாஜை, சித்தராமையா கவர்னர் மாளிகையில் சந்தித்து, ஆட்சி அமைக்க தனக்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கவர்னர் பரத்வாஜ், ஆட்சி அமைக்கும்படி சித்தராமையாவுக்கு அனுமதி அளித்து அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்கிறார். பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் இன்று காலை 11.50 மணிக்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் கர்நாடகம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என்று பல்லாயிரக் கணக்கானவர்கள் பெங்களூர் வருகிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விழா நடைபெறும் கண்டீரவா விளையாட்டு மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும், நகரின் முக்கிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கும் சித்தராமையா, கர்நாடகத்தின் 28-வது முதல்-மந்திரி ஆவார். இன்று சித்தராமையா மட்டும் பதவி ஏற்று கொள்கிறார். மந்திரிகள் யாரும் இன்று பதவி ஏற்க மாட்டார்கள்.
மந்திரிகளாக யார்-யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தி பட்டியலை காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்புவார். மேலிட தலைவர்கள் மந்திரிகள் பட்டியலை பரிசீலித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் அனுமதிக்காக அனுப்பி வைப்பார்கள்.
சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு பிறகு புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள்
 

அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மன்னிப்பு


தென்கொரிய ஜனாதிபதியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஜனாதிபதி அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பார்க் முதன்முறையாக கடந்த வாரம் (மே 5 - 9) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, அவருடன் சென்றிருந்த செய்தித் தொடர்பாளர் யூன் சாங்-ஜங், கொரிய அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து நாடு திரும்புவதற்கு முன்பே யூன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலக தலைமை அதிகாரி ஹியூ டே-இயோல் செய்தியாளர்களிடம் கூறுகையில், யூன் தலைகுனிவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். அது ஒரு வெட்கக்கேடான சம்பவம்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் நாட்டு மக்களிடமும், வெளிநாடுகளில் வசிக்கும் கொரிய மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வாஷிங்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் யூன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்
 

கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத்



பிரிட்டனில் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் கவுரவக் கொலைகளை தடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. பல நாட்டு மக்கள் வசிக்கும் பிரிட்டனில் குடும்ப கவுரவத்துக்காக இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
அது மட்டுமின்றி மதம், ஜாதி மாறி காதலிப்பவர்களை கவுரவ கொலைகளும் செய்து விடுகின்றனர்.
இவற்றை தடுக்க பிரிட்டன் அரசு தீவிர முயற்சிகள் எடுத்தும், பிரசாரம் மேற்கொண்டும் வருகின்றது. எனினும் கட்டாய திருமணங்களும், கவுரவ கொலைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

10 May 2013

முதல்வராக சித்தராமையா தெரிவு செய்யப்பட்டார்.


 கர்நாடகாவில் கடந்த 5ம் திகதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை உண்மை என நிரூபிக்கும் வகையில், தேர்தல் நடந்த 223 தொகுதிகளில் 121 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அந்தக் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தாலும் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது.
அதற்கேற்ற வகையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வராக சித்தராமையா தெரிவு செய்யப்பட்டார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான சித்தராமையா, தெற்கு கர்நாடகாவில் உள்ள வரூணா தொகுதியிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தெரிவு செய்யப்பட்டவர்.
ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையாவுக்கு ஆதரவாக 80 வாக்குகளும், கார்கேவுக்கு ஆதரவாக 40 வாக்குகளும் கிடைத்தன.
கர்நாடக முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள சித்தராமையா திங்களன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்
 

கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி



ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). தொழிலாளி.
கடந்த 5-ந்தேதி இரவு வீட்டு முன்பு திண்ணையில் தூங்கிய போது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். ராமுவின் இறுதிச் சடங்கு நடந்த போது அவரது மனைவி ரதியின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த கள்ளக் காதலன் ராஜசேகரனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.
ரதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கணவர் ராமுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது அருந்தி வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு இரவில் தூங்கி விடுவார். இதனால் "செக்ஸ்" ஆசை நிறைவேறாமல் தவித்து வந்தேன். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகரன், என்னிடம் அன்பாக பேசி பழகினார். இதனால் கணவரை வெறுத்தேன்.
நாங்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருப்போம். கணவர் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டிலும் ஜாலியாக இந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் படுக்கையில் ஒன்றாக இருந்ததை கணவர் ராமு பார்த்து விட்டார். எங்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்தார். இதனால் ஒன்று சேர முடியாமல் தவித்தோம்.
கணவரை தீர்த்து கட்டி விட்டால் ஒன்றாக வாழலாம் என்று நினைத்தோம். ராஜசேகரனும் எனது 3 குழந்தைகளையும் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து தினமும் வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கும் ராமுவை மின்தடை ஏற்படும் நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டோம்.
சம்பவத்தன்று இரவு திட்டப்படி கத்தியுடன் வந்த ராஜசேகரன் கணவர் ராமுவை கொலை செய்ய முயன்றபோது 2 பேருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. கணவர் வீட்டு கதவை தட்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் கதவை திறக்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சண்டையை பார்த்தேன்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கணவர் ராமுவின் கழுத்தை அறுத்து விட்டு ராஜசேகரன் தப்பி ஓடி விட்டார். இதில் அவர் இறந்து விட்டார். மர்ம நபர்கள் கணவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக நாடகமாடி அழுதேன். ஆனால் என்னை விசாரித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொலை நடந்த நாளில் இருந்து ராஜசேகரன் தலைமறைவாக இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ராஜசேகரனும், கொலையுண்ட ராமுவின் மனைவி ரதியும் அடிக்கடி சந்தித்து பேசுவதும் தெரிய வந்தது.
கணவனின் இறுதிச் சடங்கிலும் ரதியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
ராஜசேகரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ரதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தந்தையை இழந்து, தாயும் சிறையில் உள்ளதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது
 

மோசடி ஸ்டாராக மாறிய பவர் ஸ்டார்! புகார்கள்


 மோசடி வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவருக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றினார் பவர் ஸ்டார்.
இதையடுத்து ரங்கநாதன் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில், பவர் ஸ்டார் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பவர் ஸ்டாரை ஏற்கனவே தங்கள் காவலில் எடுத்து விசாரித்த பொலிசார் தற்போது அவரை மீண்டும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் பவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது ஏராளமானோர் புகார் கொடுத்து வருகின்றன

கற்பழிக்கப்பட்ட பெண் மனமுடைந்து


தன்னுடைய சகோதரியை கூடப் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கூறியும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்யாததால் மனம் உடைந்து போன அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட பெண் தனது 30 வயது தங்கையுடன் குவாலியரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
நான்கு நாட்களுக்கு முன்பு அவரது அண்ணன் லக்கான் பதாம் வீட்டுக்கு வந்துள்ளார். தன்னுடன் சொந்த வீட்டுக்கு வந்து விடுமாறு இருசகோதரிகளையும் கூப்பிட்டுள்ளார் பதாம்.
ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர். இதநால் கோபமடைந்த பதாம், தனது தங்கையை கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டார்.
இந்தக் கொடுமையைத் தடுக்க முடியாமல் இன்னொரு தங்கை கதறி அழுதது மேலும் கொடுமையானது. பின்னர் இரு சகோதரிகளும் பொலிஸ் நிலையம் சென்று நடந்ததைக் கூறி புகார் கொடுத்தனர்.
ஆனால் பொலிஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். எப்ஐஆர் போட மறுத்து விட்டனர். மேலும் இரு சகோதரிகளையும் அசிங்கமாகவும் திட்டி விமர்சித்துள்ளனர்.
இதனால்தான் மனம் உடைந்து பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது விசாரணைக்கு மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்

புதிய முதலமைச்சர் யார்? இன்று கூட்டம் நடைபெறுகிறது


கர்நாடக புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மொத்தம் உள்ள 224 இடங்களில் அந்த கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. சட்டசபை காங்கிரஸ் தலைவரை (முதல்-மந்திரி) தேர்ந்தெடுப்பதற்காக, புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகலில் பெங்களூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, கர்நாடக மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான மதுசூதன் மிஸ்த்ரி, மாநில தேர்வுக்குழு தலைவர் லுய்ஜினோ பெலைரோ, மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
புதிய கர்நாடக முதல்-மந்திரி தேர்வு குறித்து மேலிட பார்வையாளர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிகிறார்கள்.
அதன்பின்னர் இதுபற்றி மேலிட பார்வையாளர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தெரிவிப்பார்கள்.
அவர் புதிய முதல்-மந்திரியை தீர்மானித்து அறிவிப்பார். புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே முதல்-மந்திரி பதவியைப் பிடிக்க அரை 12க்கும் அதிகமான தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

09 May 2013

இந்திய ஜ.டி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா


அமெரிக்க குடியேற்ற சீர்திருத்த மசோதாவை எட்டு அமெரிக்க செனட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மசோதாவில் மிகப் பெரிய இந்திய நிறுவனங்களின் நலன்களுக்கு எதிராக முக்கியமான எட்டு அம்சங்கள் உள்ளன.
இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தீங்காக அமையும். “எட்டு பேர் கும்பல்" என அறியப்படும் இந்த செனட்டர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா அதிபர் கையெழுத்தின் மூலம் சட்டமாக மாறும் பொழுது, இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் தொழில் நலன்களை கண்டிப்பாக பாதிக்கும்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் உயர்மட்ட அமெரிக்க செனட்டர்களின் கூட்டத்தில், இந்திய நிறுவனங்களின் சார்பில் உத்தேச குடியேற்ற சீர்திருத்த மசோதா பற்றிய தனது கவலைகளை தெரிவித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி, உயர் திறமையான குடியேற்றம் தொடர்பான தனது ஆதரவை வெளியிட்ட செனட்டர் ராபர்ட் மென்ட்ஸுக்கு ராவ் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அமெரிக்க இந்திய வர்த்தகத்தில் இந்த மசோதா ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் எம். ஸ்ரீதரன் ஏப்ரல் 24ம் திகதி வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
விசாலமான குடியேற்ற சீர்திருத்த மசோதாவின் படி, ஹெச்-1பி ஊழியர்கள், கிளையன்ட் தளத்தில் வேலை பார்க்க தடை விதிக்கும் வாய்ப்பு உள்ளது. இது கண்டிப்பாக இந்திய நிறுவனங்களின் நலன்களை பாதிக்கும். இந்த மசோதாவின் படி ஹெச்-1பி ஊழியர்களை சார்ந்திருக்கும் ஒரு நிறுவனம் (15 சதவீதத்திற்கும் அதிகமான ஹெச்-1பி ஊழியர்களை கொண்டிருக்கும் நிறுவனம்), தனது கிளையன்ட் தளத்தில் ஹெச்-1பி ஊழியர்களை வேலைக்கு வைப்பது ஒரேயடியாக தடை செய்யப்படும்.
இரண்டாவதாக, இந்த மசோதா கிளையன்ட் தளத்தில் உள்ள எல்-1 தொழிலாளர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை முன்மொழிகிறது. இதன் விளைவாக இந்திய நிறுவனங்கள் எல்-1 தொழிலாளர்களை (சிறப்பான தகுதி பெற்ற அல்லது நிர்வாகம் சம்பத்தப்பட்ட) அமெரிக்காவிற்கு அனுப்புவது மிகவும் சிக்கலாகிவிடும். இந்த மசோதாவின் படி வேலைக்கு அனுப்பும் எல்-1 தொழிலாளர்களை இந்திய நிறுவனங்கள் மேற்பார்வையிடுவதோடு கட்டுப்படுத்த வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கான அமெரிக்க நிறுவனம் 90 நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவில் அதே பகுதியில் உள்ள எந்த ஒரு பணியாளர்களையும் ஆட்குறைப்பு செய்யவில்லை என உறுதி அளிக்க வேண்டும்.
மூன்றாவது, இந்த மசோதா ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கிறது. இந்த குடியேற்ற மசோதாவின் கீழ் அமெரிக்க நிறுவனத்தில் மொத்தமாக உள்ள ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் சதவீதத்திற்கு ஒரு எல்லையை நிர்ணயிக்கலாம்.
மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இந்த மசோதா, அக்டோபர் 1, 2014 முதல் செப்டம்பர் 30, 2015 வரையிலான காலகட்டங்களில் ஹெச்-1பி மற்றும் எல்-1 தொழிலாளர்களின் அதிகபட்ச விகிதம் 75 சதவீதமாகவும், அக்டோபர் 1, 2015ல் இருந்து செப்டம்பர் 30, 2016 வரை 65 சதவீதமாகவும், அக்டோபர் 1, 2016க்கு பிறகு 50 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது.
இந்திய அமெரிக்க தொழில் வர்த்தக கவுன்சில் மற்றும் கூட்டமைப்பு ஏற்கனவே இத்தகைய நடவடிக்கையை எதிர்த்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
 

நிலக்கரி ஊழலில் வசமாக மாட்டிய மன்மோகன் சிங்


பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் மீது நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சித்திருப்பது அவருக்கு நெருக்கடியினை அதிகரித்திருப்பதாக கருதப்படுகின்றது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தொடர்பிருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளில் புகார் தெரிவித்துள்ளன.
இதில் குற்றம்சாட்டப்பட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் கூட பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்று கை நீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் நழுவல் உத்தியைக் கடைபிடித்து ஒருவழியாக தப்பித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
இருப்பினும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் அப்படியெல்லாம் நழுவிவிட முடியாது என்ற நெருக்கடியான நிலைதான் இருந்து வந்தது. அதுவும் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரதமர் அலுவலக இணை செயலர் சத்ருகன் சின்ஹா, நிலக்கரி அமைச்சக இணை செயலர் அசோக் பல்லா ஆகியோரது நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து இந்த நெருக்கடி உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
இவர்கள் இருவரும்தான் சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் போனவர்கள்... விசாரணை வளையத்தில் இருப்பவர்கள் எப்படி விசாரணை நடத்துகிற சிபிஐயின் விசாரணை அறிக்கையை பார்வையிட முடியும்? இவர்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் என்ன வேலை? என்று நெத்தியடிக் கேள்வி எழுப்பியதன் மூலம் சிக்கல் வலை பிரதமர் மன்மோகன்சிங்கை இறுக்கவே செய்திருக்கிறது என்றே கருதப்படுகிறது.
அதுவும் இவர்கள் திருத்தியது என்பது நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணையின் மிக முக்கியமான பகுதியை என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. உச்சநீதிமன்றம். அத்துடன் சிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதி காட்டி வருகிறது. இந்த உறுதியான நிலைப்பாட்டை, உச்சநீதிமன்றத்தின் இந்த அனலை எப்படி எதிர்கொள்வாரோ பிரதமர் மன்மோகன்சிங்? என்பது தான் டெல்லி அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

பாகிஸ்தான் கைதி சனாவுல்லா உயிரிழந்தார்


ஜம்மு சிறையில் சக கைதி ஒருவரால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
பாகிஸ்தான் கைதி சனாவுல்லா கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், அங்கிருந்த கைதிகளால் தாக்கப்பட்டதில் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார்.
அதன் எதிரொலியாக, ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, கைதிகளில் ஒருவனான, சனாவுல்லா(வயது 52) என்பவனை, ஜம்மு சிறைக் கைதிகள் தாக்கியதில் அவன், கோமா நிலையை அடைந்தான்.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக, 1999ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சனாவுல்லாவுக்கு, சண்டிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 

07 May 2013

பாகிஸ்தானியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம்


 இந்தியாவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்தியப் பயணத்தின்போது மிகவும் கவனமாக இருக்குமாறு தனது நாட்டு மக்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குப் போக திட்டமிட்டால் அங்கு கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அரசு அறிவுறுத்துகிறது.
மேலும் அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. எனவே இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதனைத் தொடந்து அஜ்மீர் தர்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ள 600 யாத்ரீகர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 

இரண்டு இந்தியப் பெண்களுக்கு அமெரிக்காவில் ,

 
அமெரிக்காவில், சமூகத்தில் உள்ளவர்களை மேம்படுத்த அசாதாரண செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் விதமாக ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுறது.
இந்த ஆண்டு 15 அமெரிக்க வாழ் ஆசிய பெண்களுக்கு சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் என்ற பட்டதை வழங்கி கவுரவித்தது. இதில் இரண்டு பேர் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் ஆவார்கள்.
இந்த நிகழ்ச்சி நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் அட்லாண்டாவைச் சேர்ந்த அபர்ணா பட்டாச்சாரியா, வாஷிங்டனைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் ஆகிய இருவருக்கும் இந்த கவரவும் அளிக்கப்பட்டது.
பட்டாச்சாரியா, ரக்க்ஷா என்ற அமைப்பின் தலைவர் ஆவார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு, நீதியை பெற்றுத் தரும் சட்டதரனியாக அவர் சேவை செய்கிறார்.
ஜெயபால், ஒன் அமெரிக்கா(ஒரே அமெரிக்கா) என்ற லாப நோக்கமற்ற அமைப்பை நிறுவி, புலம் பெயர்ந்தவர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தரும் சேவையை செய்து வருகிறார்
 

அணு உலையை மூடும் வரை தொடர் போராட்டம்,.=, :


. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை.
ஆனால் கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் எந்த பகுதியிலும் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்கள் நடந்தது கிடையாது. ரஷ்ய நாட்டுடன் அணு உலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அணு உலை அமைக்ககூடாது என்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுத்தவன் நான் தான்.
தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை காரணம் காட்டி கூடங்குளம் அணு உலை அமைக்கும் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அணுஉலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
தென் தமிழகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை கருவிகள் மிகவும் மோசமானவை. நாட்டில் உள்ள 27 அணு உலைகளில் இருந்து வெறும் 2.7 சதவீதம் தான் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

06 May 2013

மாணவி கொலை வழக்கு: மாத இறுதியில் தீர்ப்பு"


டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தனது ஆண் நண்பருடன் சென்ற 23வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்சிங் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கைதான 5 பேர் டெல்லி திகார் ஜெயிலிலும், 18 வயதுக்கு குறைவான ஒரு நபர் மட்டும் சிறார் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான ராம்சிங் கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டான்.
மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை பற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் நீராஜ் குமார் கூறுகையில், மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைவு கோர்ட்டில் கடந்த ஜனவரியில் விசாரணை தொடங்கியது. இதில் 90 சதவீத விசாரணை முடிவடைந்து உள்ளது.
இதனால் இந்த வழக்கில் இம்மாத இறுதியில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்
 

அணு உலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு


 கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை உடனே நிறுத்த கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலைய அணுக்கழிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனுதாரர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்தும்வரை அணு உலையை இயக்கத் தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று வழங்கவுள்ளது
 

சிறையில் இந்திய கைதிகள் மனநோயாளிகள்: அதிர்ச்சி


பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங், கடந்த வாரம் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
ஜின்னா மருத்துவமனையில் 'கோமா' நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 2ம் திகதி மரணமடைந்தார்.
இந்நிலையில், சரப்ஜித் சிங் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோட் லக்பத் சிறையில் உள்ள 36 இந்திய கைதிகளில் 20 பேர் மனநோயாளிகளாக உள்ளனர் என்னும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய குழுவினர், பாகிஸ்தானில் உள்ள அனைத்து சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலையை கடந்த வாரம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது கோட் லக்பத் சிறையில் உள்ள 36 இந்திய கைதிகளில் 20 பேரும், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் 2 இந்திய கைதிகளும், கராச்சியில் உள்ள மலிர் சிறையில் 1 இந்திய கைதியும் மனநோயாளிகளாக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள், மனநோயாளிகள், பேச்சுத் திறன், கேட்டும் திறனற்ற கைதிகளை தகுந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? என்ன குற்றம் செய்தவர்கள்? என்ற பாகுபாடின்றி இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது