This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

24 February 2014

மயங்கிய மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவனை நடிப்பதாக கூறி காலால் எட்டி உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலந்தூர் ஊராட்சி, செட்டி குளத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் மிதின் குமார் ( 13). அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று மிதின் குமார் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்துள்ளான்.
அப்போது அங்கு வந்த தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் (37), மாணவரை பார்த்து மயங்கியது போல் நடிக்கிறாயா எனக்கேட்டு கன்னத்தில் அடித்து காலால் மிதித்துள்ளார். இதனால் அழுத படி வீட்டுக்கு வந்த மிதின் குமார் இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளான்.
இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் ஆசிரியர் வெங்கடேசனிடம் மாணவன் தாக்கப்பட்டது குறித்து விசாரித்தனர். அவர்களையும் ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து மிதின்குமாரின் பெற்றோர் பாடாலூர் பொலிசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த பொலிசார், ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆசிரியர் வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 

20 February 2014

ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது!-

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார்.

ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பாஜகவின் மற்றொரு தலைவரான ஷானவாஸ் ஹுசைன் கூறுகையில்,

தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வேறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும்  என்றார்.

அதேவேளையில், தமிழக அரசின் முடிவில் நான் எந்தத் தவறையும் பார்க்கவில்லை. இது கட்சியின் முடிவு அல்ல; தமிழக அரசின் முடிவு. இது அரசியலும் அல்ல. இதை அரசியல் விவகாரமாக நான் பார்க்கவில்லை.

இது, சட்ட அமைப்பு விவகாரம். தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு விரும்பினால், அவர்களை விடுதலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.

18 February 2014

சுவிட்சர்லாந்தாக மாறிய டார்ஜிலிங்


இந்தியாவின் டார்ஜிலிங் தற்போது சுவிட்சர்லாந்து போன்று காட்சியளிக்கின்றது.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங் அதன் சீதோஷ்ண நிலைக்காகவும், பனி படர்ந்த ரம்மியமான இயற்கைச் சூழ்நிலைகளுக்காவும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு இடமாகும்.
ஆனால், கடந்த 2007-2011 வரையுள்ள நான்கு வருடங்களாக மாநில அரசுக்கும், உள்ளூர் நிர்வாகமான கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையில் இருந்த தனி மாநிலப் பிரச்சினைகளில் டார்ஜிலிங் தன்னுடைய சுற்றுலா முக்கியத்துவத்தை இழந்தது.
அரசியல் கொந்தளிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அங்கு வெகுவாகக் குறைந்தது.
கடந்த 2011ம் ஆண்டில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக ஒப்பந்தம் அங்கு அமைதியை ஏற்படுத்தியது.
டார்ஜிலிங்கை மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக மாற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிக்கு இந்த ஆண்டு இயற்கையின் கருணையும் கிட்டியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்குப் பிறகு இந்த ஆண்டு அங்கு மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்கி யூன் மத்தியில் முடியும் சுற்றுலா பருவம் இந்த ஆண்டு பனிப்பொழிவை முன்னிட்டு தற்போதே தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிறன்று ஜோர்பங்ளோ பகுதியில் உள்ள டைகர் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த பனிப்பொழிவினால் இரண்டு அங்குல உயரத்திற்கு அங்கு பனி படர்ந்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக 3-4 டிகிரி செல்சியஸ் அளவிலேயே காணப்பட்ட வெப்பநிலை நேற்று 8 டிகிரி என்ற அளவில் உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

எனினும் நேற்று இரவு அதிகரித்த பனிப்பொழிவினால் வெப்பம் 2 டிகிரியாகக் குறைந்தது மட்டுமின்றி டார்ஜிலிங்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் பனிப்பொழிவு குறித்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.



வாலிபரை கடித்துவிட்டு உயிர் போவதை காத்திருந்து ரசித்த பாம்பு!

 மத்திய பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள அமருஜாலா பகுதியில் தனது குடும்பத்தோடு உறங்கிக்கொண்டிருந்த நபரை நள்ளிரவில் பாம்பு ஒன்று கடித்துள்ளது.
உடனடியாக பாம்பு கடித்தவரின் மனைவி தனது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் வீட்டின் வாசலின் அருகே நடு வழியில் நின்ற பாம்பு அவர்களை வெளியே செல்ல விடவில்லை. அவர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தும் பாம்பு அங்கிருந்து திரும்பவில்லை.
உடனடியாக அந்த பெண் வீட்டின் மற்றொரு பகுதியை இடித்து பார்த்துள்ளார். ஆனால் இடிக்க முடியவில்லை. முழு இரவும் அங்கேயே இருந்த பாம்பு மறுநாள் காலையிலும் அங்கிருந்து செல்ல மறுத்துள்ளது.

இதற்கிடையே மிகவும் முடியாத நிலையில் இருந்த கணவரை காப்பாற்ற அந்த பெண் வீட்டின் சுவரை இடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் உயிர் பிழைக்காமல் இறந்துவிட்டார்.

 

16 February 2014

கார் ஓட்டுவதை ரசித்த பெற்றோர்! குடும்பமே பலியான*

திருப்பூரில் ப்ளஸ் 1 மாணவனை காரை ஓட்ட பெற்றோர் அனுமதித்ததால் குடும்பமே விபத்தில் சிக்கி பலியாகியுள்ளது.

திருப்பூர் காந்தி நகர் ஆஷர் மில் 2வது தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி(49). திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரது மனைவி சிவகாமி(40). இவர்களுக்கு செல்வவேல்(16) என்ற ஒரே மகன்.

செல்வவேல் தாராபுரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ப்ளஸ் 1 படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்த மகனை வார இறுதி நாட்களை வீட்டில் கழிக்க அவரை அழைத்து வர துரைசாமி தனது மனைவியுடன் காரில் சென்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் தாராபுரத்திற்கு சென்று மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் திரும்பினார்கள். வரும் வழியில் கொடுவாய் என்ற இடத்தை தாண்டியபோது போக்குவரத்து குறைவாக உள்ள சாலை வந்தபோது மகனை காரை ஓட்டுமாறு துரைசாமியும், சிவகாமியும் கூறியுள்ளனர்.

மகன் கார் ஓட்டும் அழகை பார்த்து ரசித்துள்ளனர். அப்போது எதிரில் தாராபுரம் நோக்கி வந்த பேருந்தை பார்த்த செல்வவேல் நிலைதடுமாறி காரை பேருந்து மீது மோதினார். இதில் செல்வவேல் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்து பற்றி பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 February 2014

சக மாணவியை கற்பழித்த மாணவர் கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மருத்துவக் கல்வி படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சக மாணவர்கள் 3 பேர் இவரை ஜெய்ப்பூர் பிரதாப் நகருக்கு வரவழைத்து, அவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மயக்கமடைந்த மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவி, நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சங்கனர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில், மாணவியின் கற்பை சூறையாடியது விஜயகுமார், யோகேந்திர குமார் மற்றும் வீரேந்திர குமார் என்பது தெரியவந்தது. மேலும், குற்றவாளிகளில் ஒருவன், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் மறுத்து விட்டதால் அவர் நீதிமன்றம் சென்றதும் தெரியவந்துள்ளது.

10 February 2014

தீக்குளித்த மனைவி: பார்த்து பார்த்து ரசித்த கணவன்

மகாராஷ்டிராவில் மனைவி தீக்குளித்த போது கணவர் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி சஞ்சனா கோல்வாங்கர். இத்தம்பதிக்குத் திருமணமாகி 7 வருடமாகி விட்டது. சஞ்சனாவை, அவரது மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், மேலும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர்.
இதனால் சஞ்சனா வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனா தனது கணவர் வீட்டில் தீக்குளித்து விட்டார். இதையடுத்து உடல் முழுவதும் எரிந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் சஞ்சனா மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன்பு அவர் பொலிசாருக்கு மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், அன்று எனக்கும், கணவர் வீட்டாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது வேதனையில் நான் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டேன். அப்போது எனது கணவர் நான் எரிவதை ரசித்துப் பார்த்தார். தீயை அணைக்க அவர் முன்வரவில்லை.
நான் வலியால் துடித்தபோதும் எனது கணவர் அமைதியாக இருந்தாரே தவிர காப்பாற்ற முயலவில்லை. கடைசியில்தான் எனது உடலில் தண்ணீரை ஊற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர் என்றும் எனது முடிவுக்கு கணவர், மாமியார் வனிதா, கணவரின் அக்காள் பிரகதி ஆகியோர்தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
சஞ்சனாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது பொலிசார் இந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
 

.வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு விளக்கமறியல்


வவுனியா பம்பைமடு கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிவரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியரான எஸ். குணசேகர் என்பவரே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்று (8.2.14) மதியம் பம்பைமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர கடந்த 10 நாட்களாக வவுனியாவில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இன்று (9.2.14) காலை வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

07 February 2014

சுடச் சுட சப்பாத்தி! ருசிப்பதற்கு முந்துங்கள்


அம்மா உணவகங்களில் இந்த மாதம் முதல் சப்பாத்தி உணவினை அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் சப்பாத்தி வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது சப்பாத்தி வழங்கவில்லை.
சப்பாத்திக்கு மாவு பிசையும் எந்திரம் மற்றும் அதற்கான பொருட்கள் அனைத்தும் தற்போது தயாராக உள்ளது. எனவே, இந்த மாதம் அம்மா உணவகங்களில் சம்பாத்தி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகிற 19ம் திகதி அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இந்த நாளில் சப்பாத்தி வழங்கலாமா? அல்லது முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் திகதி சப்பாத்தி வழங்கலாமா? என்றும் ஆலோசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேரு மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
 

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் டொல்பின்களால் பரபரப்பு

ஒரே வாரத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இறந்த நிலையில் இரண்டு டால்பின்கள் கரைஒதுங்கிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில், அரியவகை கடல் வாழ் உயிரினங்களான டொல்பின், கடல் பசு, திமிங்கிலங்கள் வாழ்கின்றன.
இந்த அரியவகை உயிரினங்கள் கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ன மாற்றங்கள் மற்றும் விபத்துகள் மூலமாக மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 01 மற்றும் பிப்ரவரி 05 என பெப்ரவரி முதல் வாரத்தில் மட்டும் இரண்டு டொல்பின்கள் ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுற்றுசூழல் ஆய்வாளர் ஜெயகாந்தன்
''அழிந்து வரும் அரிய வகை உயரினமாக டொல்பின் உள்ளதால் இந்திய அரசு 2009 அக்டோபர் மாதம் இந்தியாவின் தேசிய கடல்நீர் விலங்காக டொல்பின்களை அறிவித்தது. மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின் மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

பாரம்பரிய மீன்பிடி முறையை மறந்து நாம் ஆழ்கடல் மீன்பிடி முறைகளுக்கு புகுந்து விட்டோம். இதனால் ஆழ்கடலில் வாழும் டொல்பின்கள் கரையை நோக்கி வரத்துவங்கி விட்டன. இதனால் விசைப்படகுகளில் மற்றும் பாறைகளில் மோதி, வலைகளில் பட்டு அதிகம் இறந்து விடுகின்றன.
அரியவகை உயிரினமான டொல்பின் பற்றிய விழிப்புணர்வை கடலோரப் பகுதி மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பாடசால மாணவர்களுக்கு பாடதிட்டகளில் சுற்றுச்சூழல் கல்வியில் அரிய வகை உயிரினங்களைப் பற்றிய போதிக்கப்படவும் வேண்டும்'' என்றார்.
 

06 February 2014

போஸ் கொடுக்கிறார் கேப்டன்: கொஞ்சம் பாருங்களேன்! ,,என்னம்மா

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிய யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் அறிவிப்பதாக கூறியிருந்தார் விஜயகாந்த். அம்மாநாட்டுக்கு "முத்திரை" ஒன்று வெளியிட்டார்கள். ஒற்றை விரலை உயர்த்தி "ஒன்றுபடுவோம் ஊழலை ஒழிப்போம்" என்ற முழக்கமும் வெளியிடப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்த தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள விதவிதமான போஸ்கள் உங்களின் பார்வைக்காக இதோ! இத்தனை படங்களையும் பேஸ்புக்கை ஆக்கிரமித்திருக்கும் தேமுதிக பிரமுகர்கள் சுதீஷ், சந்திரகுமார் என அனைவருமே ஷேர் செய்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


01 February 2014

: தமிழக தம்பதி கைது குழந்தை கொலை..

 நியூயார்க் : அமெரிக்காவில், குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி, கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், நியூயார்க் அருகே உள்ள, நியூஹெவன் பகுதியில் வசிப்பவர்கள் சிவகுமார், 33. இவரது மனைவி தேன்மொழி, 24. இவர்களது, 19 மாத ஆண் குழந்தை அதியன்.
இவர்கள் வீட்டு பணிப்பெண் கிஞ்சால் படேல், 27. கடந்த மாதம், 16ம் தேதி, குழந்தை ஓயாமல் அழுததால், பணிப்பெண் கிஞ்சால், அதியன் தலையை தரையில் மோதச் செய்தார். இதில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்தது. கடந்த, 26ம் தேதி, குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதையடுத்து, பணிப்பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த குழந்தையை உரிய முறையில் பராமரிக்க தவறியதற்காக, தேன்மொழி மீதும், சிவகுமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களும் கைதாகியுள்ளனர்.