This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

28 April 2014

வேலூரில் 107 டிகிரி வெயில் பதிவானது:

 தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
இதேபோல் கோவை, தருமபுரி, கரூர் பரமத்திவேலூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
ஞாயிற்றுக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்):
வேலூர் – 107, திருச்சி, சேலம் – 105, தருமபுரி, கரூர், பரமத்தி வேலூர் – 104, மதுரை,
பாளையங்கோட்டை – 103, கோவை – 100, சென்னை – 98, கொடைக்கானல் – 73

27 April 2014

பெண்ணுக்கு முத்த மழை பொழிந்த சாமியார்: கர்நாடகாவில் !!

பெங்களூரில் பிரபல சாமியார், பெண் பக்தர்களிடம் நெருக்கமாக இருந்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியில் திவ்யாஸ்ரீ ஜோதிட ஆலயம் என்ற பெயரில் மடம் நடத்தி வருபவர் ராமசாமி தேவிஸ்ரீ குருஜி.
இவர் மீது அதிக நம்பிக்கை வைத்து பெண்கள் அதிகளவில் ஜோதிடம் பார்த்து சென்றுள்ளனர்.தற்போது, தன்னை தேடி வந்த பெண் பக்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி தனியார் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது.
மேலும், குடும்ப பிரச்னைக்காக ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவருக்கு ஆசை வார்த்தை கூறி அவருடன் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் மூலிகை மருந்து கொடுத்து அவரின் கர்ப்பத்தை கலைத்தாகவும் புகார் வந்துள்ளது. இந்த காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கன்னட அமைப்பினர் அங்கு கூடி அவரின் ஜோதிட ஆலயத்தை சூறையாடியுள்ளனர்.
இந்நிலையில், சாமியார் மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

22 April 2014

மந்தார மலை கண்டுபிடிப்பு!

குஜராத்தின் கடல் பகுதியில், பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்கள் மத்தாக பயன்படுத்திய மந்தார மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புராண கதைகளில், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, மந்தார மலையை மத்தாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த மந்தார மலையை தற்போது குஜராத் பகுதியில் அமைந்துள்ளதாக, கடல்சார் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையிலான கடல்சார் துறை விஞ்ஞானிகள், குஜராத்தின் தென் பகுதியில் உள்ள கடல் பகுதியில், மேற்கொண்ட ஆய்வின் போது, வித்தியாசமான தோற்றத்தில், கடலில் மூழ்கியிருந்த மந்தார மலையை கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

 
 
 

18 April 2014

வெங்காய விலை : ஒரே வாரத்தில் 40% உயர்வு

. வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில் பருவம் கடந்து பெய்த மழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரே வாரத்தில் வெங்காய விலை 40% உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.575 முதல் ரூ.801 வரை இருந்தது.

 ஆனால், 17ம் தேதி ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.750 முதல் ரூ.1011 வரை என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், தற்போது சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இது மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது

15 April 2014

இந்திய இலங்கை மீபேச்சுவார்த்தை மே மாதம்

 இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் மே மாதம் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் நடத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அரசாங்கம் இதற்கான அனுமதியை வழங்கி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தமிழக அரசாங்கத்தின் சார்பில், தமிழக மீன்பிடித் திணைக்களத்தின் செயலாளர் எஸ்.விஜயம், மத்திய அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசாங்கம் இலங்கையில் உள்ள தமது உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து, இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி இரண்டு தரப்புக்கும் இடையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருந்தது.
இதன் பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இரண்டு தடவைகள் இந்த பேச்சுவார்த்தைகள் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டன.
இந்த நிலையில் மே மாதம் இந்த பேச்சுவார்த்தை நடத்த இணங்கப்பட்டிருக்கிறது

06 April 2014

போர்வெல்லில் விழுந்த 3 வயது சிறுமி பலி

.விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்ட போதும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே தியாகதுருகம் பள்ளகசேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது தோட்டத்தில் 500 அடி ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். அக்கிணறு சாக்குத் துணியால் மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் 3வயது மகள் மதுமிதா எதிர்பாராதவிதமாக அந்த ஆழ்துளை கினற்றில் தவறி விழுந்தாள். இதனால் பதறிப் போன ராமச்சந்திரன் குடும்பத்தினர்
 
தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து சென்றனர்.குழந்தை விழுந்த கிணறு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. 500 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 25 அடி ஆழத்தில்தான் குழந்தை சிக்கியிருப்பதால் உயிருடன் மீட்டுவிடலாம் என்று தீயணைப்புத் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.நவீன கருவிகளுடன் தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி, கிட்டத்தட்ட 18 மணி நேரங்களுக்கு பிறகு இன்று காலை 3 மணியளவில் சிறுமியை மீட்டனர். உடனடியாக சிகிச்சைகாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மதுமிதா. ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மதுமிதா உயிரிழந்தாள்.