This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 June 2014

பெற்ற மகளின் கற்பை சூரையாடிய தந்தை

 மங்களூரில் பெற்ற மகளையே கற்பழித்ததாக கூலித் தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே பஜ்பே பொலிஸ் எல்லைக்குட்பட்ட கரும்பார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர் (47).
கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.
மனைவி இறந்துபோய் விட்டதால் சந்திர சேகர் அவரது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சந்திரசேகரின் வீட்டிற்கு அவருடைய மனைவியின் தங்கை வந்து சிறுமியை பார்த்து நலம் விசாரித்து செல்வார். மேலும் சந்திரசேகருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்திரசேகர் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது மதுகுடித்து போதையில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடிபோதையில் வீட்டில் தனியாக இருக்கும் 17 வயது சிறுமியை பெற்ற மகள் என்று கூட பாராமல் கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக அவர் சிறுமியை மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் சந்திரசேகரின் வீட்டின் அருகே உள்ள அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து மங்களூர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பஜ்பே பொலிசார் உதவியுடன் சென்று சிறுமியை மீட்டு மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பஜ்பே பொலிசார் பெற்ற மகளையே கற்பழித்ததாக கூறப்படும் சந்திர சேகரை கைது செய்துள்ளனர்.
 

20 June 2014

திருகோணமலைக்கு வடக்கே 7 இந்திய மீனவர்கள் கைது!

திருகோணமலை வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் 07 பேரை கடற்படையினர் நேற்று கைதுசெய்ததாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கடற்படையினர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இம்மீனவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
 

14 June 2014

நடிகை சொர்ணாக்கா மாரடைப்பால் மரணம்!

 'தூள்' படத்தில் அனைவரும் ரசித்த சொர்ணாக்கா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார். 70-க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடல் உள்வாங்கியதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

 கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியதால் இன்று காலை திடீரென கடலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடல் நீர் உள் வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள், பாசிகள் வெளியே தெரிந்தன. அதிகாலையில் கடலில் நீராடச் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பதறியடித்து கரை திரும்பினர். கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
கடல் உள்வாங்கியதால் படகுத்துறையில் நீர்மட்டம் தாழ்ந்தது. இதன் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிகாலையிலேயே படகில் செல்ல டிக்கெட் வாங்க காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 10 மணியளவில் கடலின் நீர்மட்டம் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் படகு இயக்கப்படவில்லை. 

மற்றைய செய்திகள்

12 June 2014

அகதி அந்தஸ்து கோருவதற்காக கடலில் நீந்திச் சென்றார் இலங்கையர்!

தமிழ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருவதற்காக இலங்கையில் இருந்து கடலில் நீந்திச் சென்ற கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டுள்ளனர். 
ராமேஸ்வரம் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லும் வேளையில், திடீரேன கடலில் தென்பட்ட குறித்த இலங்கையரை அவர்கள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.
அவர் தமிழகத்தின் விசாரணைப் பிரிவு காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் இருந்து சென்ற மீனவர் படகு ஒன்றின் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள தீவு ஒன்றில் இறக்கிடப்பட்டதன் பின்னர், அவர் நீந்தி கரை சேர முற்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

11 June 2014

மூளை வீக்க நோய் தாக்கம் - இதுவரை 38 சிறுவர்கள் மரணம்!

பீகாரில் உள்ள முசார்பர்பூர் மாவட்டத்தில் மூளை வீக்கம் காரணமாக இந்த வருடம் மட்டும் இதுவரை 38 சிறுவர் சிறுமியர் உயிரிழந்ததுடன், 120 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமையான வியாதி ஏழை மக்களை தான் வெகுவாக தாக்குகிறது. இந்நோய்க்கு இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எட்டு வயது பெண்ணின் தற்போதைய நிலை நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது
அச்சிறுமிக்கு மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மருத்துவர்கள் அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவளது பெற்றொர் நேற்று காலை கடுமையான காய்ச்சல் மற்றும் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த இருபது வருடங்களாக முசாபர்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயிர் கொல்லும் பயங்கரமான இந்நோய் ஏன் பரவுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலும் இதே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நோய் பரவ முக்கிய காரணம் கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை தான் என அறுவை சிகிச்சை நிபுணரான கியான் பூஷன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தலைநகர் டெல்லியில் இது குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு இந்நோயை குணப்படுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்நோயை தடுக்க ஐந்து ஆண்டு திட்டத்தை வகுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முசாபர்பூரில் மூளை வீக்க நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
.

கோடீஸ்வரர் குடும்பங்களது எண்ணிக்கை 1.75 லட்சம்!

 உலக அளவில் கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில், இந்தியா 16-ஆவது இடத்திலிருந்து 15-ஆவது இடத்தை எட்டியுள்ளதாக, போஸ்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில், இந்தியா 7வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 1.75 லட்சம் கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் சொத்து குறித்து ஆய்வு நடத்திய போஸ்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த பட்டியலில், 71 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
2012ஆம் ஆண்டில் 15 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களுடன் இருந்த சீனா, கடந்த ஆண்டு 24 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்டிருந்தது. ஜப்பானில் டாலருக்கு எதிரான யென் மதிப்பு வீழ்ச்சியால், 2102ஆம் ஆண்டு 15 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள், கடந்த ஆண்டு 12 லட்சமாக குறைந்தது. உலக அளவில் 2012ஆம் ஆண்டு 13.7%ஆக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 16.3%ஆக அதிகரித்தது.
2012ஆம் ஆண்டு 8.7% இருந்த தனிநபர் நிதி வளர்ச்சி, பங்கு சந்தைகளின் வளர்ச்சியால் 2013ஆம் ஆண்டு 14.6% வளர்ச்சியடைந்தது. கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில் 2012ஆம் ஆண்டு 16ஆவது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டு 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று போஸ்டன் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

09 June 2014

ஆப்கானிஸ்தானில் இருந்து மின்னஞ்சல்பாதிரியார் திரும்பிவிடுவார்: !

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பத்திரமாக இருப்பதாகவும், அவரை மீட்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதால் விரைவில் மீட்கப்படுவார் என்று மின்னஞ்சல் வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை வாரியன்வயலைச் சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம் குமார்.
சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர், ஆப்கானிஸ்தான் ஹராத் மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய குழந்தைகள் கல்விக்காக பாடுபட்டு வந்தார்.
கடந்த 2ம் திகதி அலெக்சிஸ் பிரேம்குமாரை, தலிபான் தீவிரவாத குழு கடத்திச் சென்றது.
பாதிரியாரைக் கடத்த உதவிய 3 தலிபான் தீவிரவாதிகள் மட்டும் கைது செய்யப்பட்டதாக இதுவரை தகவல் வந்துள்ளது.
அவரைக் கடத்தி ஏழு நாள்களாகியும், இதுவரை அவரை பற்றிய உறுதியான தகவல் கிடைக்காமல் அவரது பெற்றோர், உறவினர்கள் கண்ணீருடன் நாள்களைக் கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் அலெக்சிஸ் பிரேம்குமார் பணிபுரியும் ஜே.ஆர்.சி., நிறுவன கிறிஸ்தவ பாதிரியார் குழு, டெல்லியில் முகாமிட்டு இந்திய வெளியுறவுத் துறை மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தினமும் தொடர்பு கொண்டு பாதிரியாரை மீட்க போராடி வருகிறது.
அலெக்சிஸ் பிரேம்குமார், சொந்த மாவட்டம் சிவகங்கை என்றாலும், அவர் பத்தாம் வகுப்பு படிக்கும்வரை மட்டுமே அங்கு பெற்றோருடன் இருந்துள்ளார்.
அதன்பின் உயர்படிப்புகளை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் படித்துவிட்டு, கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட பிற இடங்களில் தங்கி சமூக சேவை புரிந்துள்ளார்.
அதனால், அவருக்கும், சிவகங்கை மாவட்டத்துக்கும் பெரிய தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.
பெற்றோர், சகோதர, சகோதரிகளை மட்டும் பார்ப்பதற்கு, அவர் சிவங்கை மாவட்டம் வந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரின் சகோதரர் ஆல்பர்ட் மனோகரனிடம் கேட்ட போது, இன்னமும் பத்திரமாக இருப்பதாகத்தான் சொல்கின்றனர். ஆனால், எப்படி, எங்கே இருக்கிறார் என்பது மட்டும் தெரியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூலம் தெரியப்படுத்தி உள்ளோம்.
முதல்வருடன், முக்கிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அலெக்சிஸ் பிரேம்குமார் பணிபுரிந்த ஜே.ஆர்.சி. நிர்வாகிகள் தெரிவிக்கையில், பொறுமையாக இருங்கள், அவர் 2 நாளில் திரும்பி வந்துவிடுவார் என ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லியில் உள்ள ஜே.ஆர்.சி. பாதிரியார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

08 June 2014

மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்!


இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற விசைப்படகு மீனவர்களின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்றும், வரும் 11ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

06 June 2014

பெண்களுடன் காம லீலைகள் புரிந்த 19 வயது காதல் மன்னன்:

  தொலைக்காட்சி மூலம் அம்பலமான உண்மை ( காணொளி இணைப்பு) பேஸ்புக் மூலம் பல பெண்களை தன் காதல் வலையில் வீழ்த்திய 19வயது இளைஞன் பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் பேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவர் பல பெண்களை காதலிப்பதாக சொல்லி நம்ப வைத்து செக்ஸ் காணொளி எடுத்து கடைசியில் தவறான தொழிலுக்கு வெளி மாநிலங்களுக்கு விற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல பெண்கள் இந்த இளைஞனை விட வயதில் மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்த இளைஞரால் பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்ப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோருடன் நேரில் வந்து நடந்தவற்றை விளக்கியுள்ளனர்.

 

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினிகாந்த்?

 சீமாந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீமாந்திரா முதலமைச்சர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வருகிற 8ம் திகதி விஜயவாடா – குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் பதவி ஏற்கவுள்ளார்.
விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் 11 மாநில முதலமைச்சர், மந்திரிகளுக்கு சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்து உள்ளார்.
இதுதவிர எம்.பி.க்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்பட 5 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் வருகின்றனர்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகனும் பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் ஆகியோரும் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக தெலுங்கு தேச கட்சி செயலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜனசேனா கட்சி தலைவரும், சிரஞ்சீவி தம்பியுமான நடிகர் பவன்கல்யாண் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

05 June 2014

பேஸ்புக்கில் போட்டோ களை இழிவு படுத்தியவர் அடித்துக்கொலை!

புனேவை சேர்ந்த 24 வயதுமிக்க மொஹின் சாதிக் ஷைக் என்ற முஸ்லிம் கணிப்பொறி பொறியாளரை ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேர் அடித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மொஹின் சாதிக் ஷைக் பேஸ்புக்கில் சிவாஜி போட்டோவையும் சிவ சேனா தலைவர் பால் தாக்கரே போட்டோவையும் இழிவு படுத்தி பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார்.
 இதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவர் தனது நண்பருடன் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு திரும்பும் போது ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனால் புனேவில் பரப்பரப்பு ஏற்பட்டது. 200 க்கும் அதிகமான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 



04 June 2014

பலாத்காரம்: பெண் நீதிபதி உத்திரப் தொடரும்!!

உத்திரப் பிரதேசம் அலிகாரில் பெண் நீதிபதி ஒருவர் உறவினர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அலிகாரில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பில் 32வயதாகும் பெண் நீதிபதி ஒருவர் வசித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க பெண் நீதிபதி கூச்சலிட்டபோது, இருவரும் சேர்ந்து அவரது வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியுள்ளனர்.
அவர் தொடர்ந்து கூச்சலிட்டு திமிறியபோது வாயில் துணியைத் திணித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியத்தால் பெண் நீதிபதி மயங்கி விழுந்துள்ளார்.
மறுநாள் காலையில் வீட்டுப் பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்த பொலிசார், படுக்கை அறையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம், பொலிஸ் உயர் அதிகாரி நிதின் திவாரி ஐ.ஏ.என்.எஸ். கூறுகையில், பெண் நீதிபதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
அவர் சிறிது உடல்நலம் தேறியதும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பரூக்காபாதைச் சேர்ந்த பங்ராஜ் குப்தா, பரேலியைச் சேர்ந்த கோபால் குப்தா ஆகியோர் மீது பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொலிசார் தேடி வருகின்றனர்.
மேலும், அவர்கள் இருவரும் பெண் நீதிபதியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


எம்.எல்.ஏ மீது செக்ஸ் புகார்: நீதிமன்றத்தில் வாக்குமூலம்

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சரிதா நாயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
சரிதா நாயர் தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியதாகவும், தனது தொகுதியில் சூரிய மின்தகடு பதிப்பது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஒரு ஹொட்டலில் பேச வந்தபோது பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் சரிதா நாயர், திருவனந்தபுரத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், நேற்று ஆஜராகி மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் பேசியபோது, நீதிம்னறத்தில் அளித்த ரகசிய வாக்குமூலம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என மறுத்துள்ளார்.
இந்நிலையில், அப்துல்லா குட்டி மீதான பாலியல் புகார் குறித்த தகவல்களை அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

மீனவர்கள் விடுதலை: படகுகளை விடுவிக்க இலங்கை மறுப்பு!

 ராமேஸ்வரம்: இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவின்பேரில் தமிழக மீனவர்கள் 29 பேர் மன்னார் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த மாதம் 31ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேரையும், 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, தமிழக மீனவர்கள் 29 பேரை விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இலங்கை அட்டர்னி ஜெனரல், மன்னார் நீதிமன்றத்திற்கு அதிபர் உத்தரவு ஆணையை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, 29 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்து நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டார். அப்போது, படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, படகுகளை விடுவிப்பது தொடர்பாக வரும் 16ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து, 29 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். ஆனால், மேலும் 4 மீனவர்களும் இந்திய தூரதக அதிகாரிகள் பாதுகாப்பில் உள்ளனர்

03 June 2014

தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா;

இலங்கைத் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா; யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் பிரதானி தெரிவிப்பு
இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் வடக்கு மாகாணத்துக்கு 125 பில்லியன்  ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் பிரதானி ஜஸ்ரின் மோகன்.   பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சி மாநாடு நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு  உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “”இரு நாட்டு அரசுகளதும் கூட்டு முயற்சியால் இலங்கையில் பல அபிவிருத்திகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.  வடக்கு மாகாணத்திலும் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் அமைக்கப்படும் கைத்தொழில் பேட்டைக்கு  220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இன்னும் 2 மாதங்களில் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதனால்  யாழ்ப்பாண மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.    குருநகரில் 166 மில்லியன் ருபா செலவில் மீன்பிடி வலைத் தொழிற்சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதற்கு ஜப்பானில் இருந்து உயர்தர இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் 5 மடங்காக  தொழிற்சாலையில் நன்மை அதிகரித்துள்ளது.   இலங்கைத்தமிழர்களுக்காக பல வளர்ச்சி திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு  மட்டும் 125 பில்லியன் ரூபா செலவு செய்திருக்கின்றோம். இவற்றில் 100 பில்லியன் ரூபா ரயில் புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.   தற்போது  பளை வரை வந்துள்ள ரயில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் வரை வரும். அடுத்த 3 மாதங்களில் காங்கேசன்துறைக்கும் விஸ்தரிக்கப்படும். இவற்றை விடவும் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வருடம்  16 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இதற்காக  35 பில்லியன் ரூபா செலவு  செய்யப்பட்டது.    12 பில்லியன்  ரூபாவில்  10.5 பில்லியன்  நேரடியாக பயனாளிகளிடம்  வழங்கப்பட்டுள்ளது. இதனை விடவும் விவசாயம் கைத்தொழில், கல்வி எனப் பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக உதவிகளை வழங்கி வருகிறது. இந்திய அரசியல் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டாலும் உதவிகள் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.