Search This Blog n

16 September 2014

ராமநாதபுரத்தில் உள்ள 184 கிராமங்களில் இந்தியப் புலனாய்வாளர்கள்!

 சிறிலங்காவில் இருந்து தென்னிந்தியாவுக்குள் தீவிரவாதிகள் பிரவேசிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள 184 கிராமங்களிலும் இந்திய புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளும், புலனாய்வு அமைப்புகளும் தென்னிந்தியாவில் தாக்குதலை நடத்துவதற்காக சிறிலங்காவை பயன்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறிலங்காவில் இருந்து கடல்மார்க்கமாக தென்னிந்தியாவுக்கு தீவிரவாதிகள் ஊடுறுவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான ஊடுறுவலை தடுக்கும் நோக்கில், ஏற்கனவே புலனாய்வு பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த குழு தற்போது சிறப்பாக இயங்கி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment