Search This Blog n

25 September 2014

மீனவர்கள் 6 பேர் தமிழக மற்றும் ஆந்திர கடற்பரப்பில் கைது

தமிழக மற்றும்ஆந்திர மாநில எல்லைப்பகுதியிலுள்ள கடற்பரப்பில்மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணாம்பட்டினம் கடற்பரப்பில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினின் ரோந்து நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள், சென்னை துறைமுக பொலிஸாரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மீனவர்களின் மீன்பிடி படகும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மீனவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சென்னை துறைமுக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment