Search This Blog n

19 September 2014

சிறைக் கைதி தற்கொலைக்கு முயற்சி

 இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கைதியொருவர், தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ராஜா (வயது 32) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற நிலையில், கடந்த புதன்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.
இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்னர் 4 பேரில் ஒருவராக கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment