Search This Blog n

23 September 2014

மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நோக்கம் இல்லை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது பிடிப்பட்ட படகுகள் இலங்கை அதிகாரிகளால் ஏலத்தில் விடப்படவுள்ளதாக அண்மையில் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸின் இது தொடர்பான குற்றச்சாட்டும் இந்திய ஊடகங்களில் வெளியானது.
எனினும் அவ்வாறான எந்த ஏற்பாடுகளும் இல்லை என்ற மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த படகுகளை ஏலத்தில் விடவேண்டுமெனின், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் தற்போது 76 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 73 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment