Search This Blog n

07 December 2015

இடியுடன் கூடிய கனமழை சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் பெய்யும் !!!

சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு, சென்னையில் 3 நாட்கள் கனமழை தொடரும் என்றும், மழையளவு 50 செ.மீட்டர் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி சென்னையில் கனமழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகம் அருகே தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது என்றும், இதன் காரணமாக டிசம்பர் 7–ம் தேதியும் (இன்று), 8–ம் தேதியும் (நாளை) தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மைய தலைமை இயக்குனர் எஸ்.பாகுலேயன் தம்பி நேற்று 
தெரிவித்திருந்தார்.
இதேபோன்று டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு, சென்னையில் 3 நாட்கள் கனமழை தொடரும் என்றும், மழையளவு 50 செ.மீட்டர் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது 
குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் 
எச்சரித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment