Search This Blog n

02 December 2015

நவம்பர் மாத மழை: நூலிழையில் தவறவிட்ட சென்னை!

சென்னை இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று சாதனையை நூலிழையில் 
தவறுவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் திகதி தொடங்கிய நிலையில், சென்னையில் நவம்பர் மாதத்துகான மழைப்பதிவு 1049.3 மி.மீ பதிவாகியுள்ளது.
இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த அதிக
 மழையளவு ஆகும்.
இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் கனமழை பெய்து வந்ததால் 2015 நவம்பர் மாத மழையளவு பழைய சாதனையை முறியடிக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லை.
எனவே, நவம்பர் 30-ம் திகதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் சென்னையில் 1049.3 மி.மீ மழை பதிவானதன் மூலம், சென்னை புதிய சாதனையை நூலிழையில் தவறிவிட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment