Search This Blog n

08 December 2015

நிவாரண நிதியாக திருமண செலவை வழங்கும் “காதல் நாயகி“ சந்தியா


காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம் மிக எளிமையான முறையில் கேரளாவில் நடந்தது.
 காதல் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சந்தியா, மலையாளம்- தெலுங்கு படங்களிலும் 
நடித்துள்ளார்.
இவருக்கு சென்னை அசோக்நகரை சேர்ந்த ஐ.டி பொறியாளர் வெங்கட் சந்திரசேகரன் என்பவரும் திருமணம் நிச்சயமானது.
இவர்களது திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கனமழை காரணமாக இவர்கள் குடியிருந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.
இதனையடுத்து திருமணத்தை சென்னை பதிலாக கேரளா குருவாயூரில் நடத்த முடிவு செய்ததுடன், மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர் கூறுகையில், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டோம்.
ஆனால் மழை காரணமாக குருவாயூர் கோவிலில் நடத்தி உள்ளோம். எனவே திருமண செலவை சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்
 என தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துகள்:

Post a Comment