This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 January 2016

பாஸ்போர்ட் ஒரு வாரத்துக்குள் பெறலாம் விதிகளை தளர்த்தியது அரசு!

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் 
கூறப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 
தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் 
என்று தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



அடுத்தமாதம் வரை தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்!

தமிழக மீனவர்களிற்கு அடுத்தமாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் மொஹமட் ரியாஸ் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டையை சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று இரண்டாவது முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த 17 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் 
கைதுசெய்யப்பட்டனர்.
ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த மீனவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21 January 2016

பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோகும் படி கூறிய பஞ்சாயத்து?

மகாராஸ்டிரா மாநிலத்தில் கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை, தங்கள் பாலியல் தேவைக்கு ஒத்துப் போகும்படி சாதி பஞ்சாயத்து தலைவர்கள் மிரட்டுவதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
மகாராஸ்டிரா மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தீபக் போர்.
கோந்தாலி சமூகத்தைச் சேர்ந்த இவர் தங்கள் “சாதி சங்கம பஞ்சாஸ்” என்ற பஞ்சாயத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
அவர் இது வரை பஞ்சாயத்திற்கு ரூ.2.5 லட்சம் கட்டி உள்ளார். தற்போது அவரது சாதி சங்கம் ரூ. 6 லட்சத்தை உடனே திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு கொண்டது.
ஆனால் அந்த பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க முடியாது என்றும், அதற்கு கால அவகாசம் தேவை என்று தீபக்கும் அவரது மனைவியும் கூறியுள்ளனர். இதனால், அந்த பஞ்சாயத்து அவர்களை 
ஒதுக்கி வைத்தது.
இது குறித்து தீபக்கின் உறவினர் ஒருவர் கூறுகையில், “சாதி பஞ்சாயத்து தீபக்கின் வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து அவரது மனைவியிடம் தவறாக நடந்துள்ளனர்.
அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்துள்ளனர். அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தற்கு அடையாளமாக அவரது வீட்டின் கதவில் செருப்புகளை கட்டி வைத்தனர்.
இதனால், அந்த தம்பதியினர் நாசிக்கிற்குத் தப்பி ஓடினர். மேலும் சமூதாய உத்தரவை புறக்கணித்து அவரது உறவினர் யாரும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்று சாதி பஞ்சாயத்து எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தீபக்கின் மனைவி சாதி பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களின் பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோவதாக இருந்தால் அவரது கணவர் கொடுக்க வேண்டிய ரூ. 6 லட்சத்தை கட்டவேண்டாம் 
என்று கூறி
 மிரட்டுவதாக கூறியுள்ளார்.  இது குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் முன்வரவில்லை என்று கூறப்படுவது
 குறிப்பிடத்தக்கது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17 January 2016

தொடங்குகிறது நாளை சென்னை ஓபன் செஸ்?

சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.
என்.மகாலிங்கம் கிண்ணத்திற்கான இந்தப்போட்டியில் 19 கிராண்ட் மாஸ்டர்கள் 21 சர்வதேச மாஸ்டர்கள்
 பங்கேற்கின்றார்கள்.
ரஷ்யா, இஸ்ரேல், இத்தாலி, உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து உள்பட 11 நாடுகளில் இருந்து 24 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். இந்தியா சார்பிலும் முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து
 கொள்கிறார்கள்.
இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை 11 லட்சம் இந்திய ரூபாயாகும். சம்பியன் பட்டம் பெறுபவருக்கு 2 லட்சமும், இரண்டாவது இடத்துக்கு 1.5 லட்சமும் கிடைக்கும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் வி.அரிகரன் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

16 January 2016

நூற்றுக்கணக்கில் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

தமிழகத்தின் தூத்துக்குடி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன.
அவற்றுள் 45 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் தூத்துக்குடி அருகே நேற்றிரவு இந்தத் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளதாக அதிகாரிகள் 
குறிப்பிட்டனர்.
திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கு உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து அந்தப் பகுதி மக்கள் முயற்சித்த போதிலும், திமிங்கிலங்கள் மீண்டும் கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1973 ஆம் ஆண்டும் தூத்துக்குடியில், இதேபோன்று திமிங்கிலங்கள் கரையொதுங்கியிருந்ததோடு அவற்றுள் 147 திமிங்கிலங்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

15 January 2016

இந்திய மீனவர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலை!

யாழ்ப்பாணத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்கள் தைத் திருநாளை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுதப்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
45 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் தமது அதிகாரிகளினால் ஊர்க்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 10 மீனவர்கள் பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா
 கூறினார்.
குறித்த மீனவர்களது 45 படகுகளும் மீன் பிடி உபகரணங்களும் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இராமநாதபுரம்,புதுக்கோட்டை நாகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களை விரைவில் நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ஏ. நடராஜன் கூறினார்.
இதேவேளை விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மெற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பணிப்புரை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
தமிழக மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமது அரசாங்கம் மேற்கொள்ளும் என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 08 இந்திய மீனவர்களை இன்று இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரிடம் கடலில் கையளிக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறைக்கு வடக்கில் அமைந்துள்ள கடல் எல்லைப் பகுதியில் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரிடம் குறித்த மீனவர்கள் கையளிக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர்
 கூறினார்.
கடந்த 04 ஆம் திகதி இலங்கை மீனவர்களின் படகைத் தாக்கிய குற்ற்ச்சாட்டில் முல்லைத்தீவு மீனவர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் குறித்த 08 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர்
இந்நிலையில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு கடந்த 09 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

07 January 2016

மாணவர் மூவரின் வெறிச்செயல் மாணவிக்கு கத்திக்குத்து!!!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்–2 படிப்பவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக, புரசைவாக்கம் பெருமாள்சாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இன்னொரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் அங்கு வந்தனர். மாணவி மாதவியோடு 
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென்று மாணவர்களில் ஒருவர் மாதவியின் இடது கையில் கத்தியால் குத்தினார். மாதவியின் கையில் ரத்தம் கொட்டியது. பின்னர் 3 மாணவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாதவி இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரபு விசாரணை மேற்கொண்டார்.
காதல் போட்டி
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மாணவி மாதவியை பின்தொடர்ந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களும், அதே பகுதியில் உள்ள இன்னொரு பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். அவர்கள் மாதவி தினமும் பள்ளிக்கு வரும்போது பின்தொடர்ந்து வந்து கிண்டல் செய்வார்களாம். நேற்றும் அதுபோல, கிண்டல் செய்துள்ளனர்.
பின்னர் மாதவியிடம் ‘நாங்கள் 3 பேரும் உன்னை காதலிக்கிறோம், நீ எங்களில் யாரை விரும்புகிறாய் என்பதை சொல்ல வேண்டும்’ என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.
மாதவி பதில் ஏதும் சொல்லாமல் நடந்து சென்றுள்ளார். அதன்பிறகு தான் மாணவர்களில் ஒருவர் கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
போலீஸ் விசாரணையில் மாதவி முரணான தகவல்களை
 கூறியதாக தெரிகிறது
. முதலில் 3 மாணவர்களும் யார் என்பதை தெரிவித்துள்ளார். பின்னர் 3 மாணவர்களும் முகத்தில் கைக்குட்டை கட்டியிருந்தனர் என்றும், அவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் மாதவி முதலில் சொன்ன தகவலை வைத்து 3 மாணவர்களையும் தேடி வருவதாக போலீசார் 
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

05 January 2016

இந்திய மீனவர்கள் நால்வர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காரைநகர் கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடற்படையினர்
 கைது செய்தனர்
. அத்துடன் இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>