This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

20 July 2016

: கேரள பள்ளி மாணவரின் இதயம், சிறுநீரகங்கள் தானம்

திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பமங்கலம் கோராணி பகுதியை சேர்ந்வதர் சதீஷ். இவர் துபாயில் தொழில் அதிபராக உள்ளார். இவரது மனைவி ஷீலா. இந்த தம்பதியின் மகன்கள் இசீஸ்,
 விஷால் (வயது 15).
மூத்த மகன் இசீஸ் துபாயில் தந்தையுடன் தங்கி இருந்து அங்கேயே படித்து வருகிறார். 2-வது மகனான விஷால் தாயுடன் கோராணியில் தங்கி இருந்து தனது வீடு அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து 
வந்தார்.
கடந்த திங்கட்கிழமை விஷால் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயம் அடைந்த விஷால் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாணவர் விஷாலுக்கு மூளைச்சாவு
 ஏற்பட்டது.
விஷால் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சதீஷ் தனது மூத்த மகனுடன் திருவனந்தபுரம் திரும்பி இருந்தார். அவரிடம் டாக்டர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். இதை கேட்டதும் சதீசும் அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
மகனை இழந்த சோகம் அவர்களை வாட்டினாலும் தனது மகன் இறந்த பிறகும் பிறர்மூலம் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
இதைதொடர்ந்து விஷாலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
விஷாலின் இதயம், சிறுநீரகம், கண்களை தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விஷாலின் இதயம் அகற்றப்பட்டு நேற்று காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் கொச்சிக்கு 
காலை 9.30 மணிக்கு
 கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து 15 நிமிடத்தில் கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற இதயம் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தியா (27) என்ற பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இதயம் தானம் பெற்ற சந்தியா கேரள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் தனது நிலை பற்றி மனுமூலம் தெரிவித்து இதய தானத்திற்காக காத்திருந்தவர் ஆவார். முன்னுரிமை அடிப்படையில் அவருக்கு இதயம் தானம் செய்யப்பட்டது.
இதேபோல விஷாலின் சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா (30) என்ற பெண்ணுக்கும், கண்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பகருதீன் (39) என்பவருக்கும் தானமாக 
வழங்கப்பட்டது.
மாணவர் விஷாலின் உடல் அவர் படித்த பள்ளிக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் கண்ணீருடன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனும் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினார்.
விஷாலின் தந்தை அளித்த உருக்கமான பேட்டியில் எனது மகன் விபத்தில் மூளை சாவு அடைந்தாலும் தற்போது 3 பேர் உடலில் அவன் உயிர் வாழ்கிறான். இறந்தாலும் அவன் உயிர் வாழவேண்டும் என்ற என்னத்தில் அவனது உடல் உறுப்புகளை தானம் 
செய்துள்ளோம் என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


12 July 2016

அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது பலத்த பாதுகாப்பு

காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையும் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து 
கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்கான் வானி கடந்த 8–ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை பரவி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவார முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு
 இருந்தனர்.
எனினும் நேற்று மாலையில் இந்த யாத்திரையை மீண்டும் தொடங்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதைத் தொடர்ந்து பகவதிநகர் அடிவார முகாமில் தங்கியிருந்த 3,500 பக்தர்கள் பல்தால் மற்றும் பகல்காம் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். வன்முறை மற்றும் போராட்டங்கள் காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

11 July 2016

கட்டிடத்தை இடித்து அகற்றியதில் 4 பேர் பலி: செயற்பொறியாளர் சிறையில் அடைப்பு?

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் பொதுஇடத்தை ஆக்கிரமித்திருந்த அத்துமீறலான கட்டிடத்தை இடித்து அகற்றும்படி கண்டோன்மென்ட் வாரிய அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்களை காலிசெய்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்க கடந்த 9-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, புல்டோசர் மற்றும் கிரேன் வாகனங்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கண்டோன்மென்ட் அதிகாரிகள் அங்கு வந்து சேர்ந்தனர். காலை 6 மணிவரை வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. அந்த கட்டிடத்தின் ஒருபகுதியில் இருந்த சுவரை புல்டோசர் வாகனம் இடித்து தள்ளியது. அப்போது, வீட்டினுள் இருந்த 7 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினர். அவர்களில் 4 பேர் பிணங்களாகவும், மூன்றுபேர் உயிருடனும்
 மீட்கப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மீரட் நகர மாஜிஸ்திரேட் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பவ இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு தலைமை வகித்த கண்டோன்மென்ட் நிர்வாகத்தின் செயற்பொறியாளர் அனுஜ் சிங் என்பவரை கைது செய்த போலீசார், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு 
செய்துள்ளனர்.
நேற்று அனுஜ் சிங்கை நீதிபதியின்முன் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அனுஜ் சிங்கை கோர்ட்டுக்கு அழைத்துவந்தபோது அங்கு திரண்டிருந்த சிலர் இந்த சம்பவத்துக்கு காரணமான உதவிப் பொறியாளரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உத்திரவாதம் அளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



10 July 2016

நடந்த காஷ்மீர் வன்முறை: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

 ஜம்மு- காஷ்மீரில் வன்றை சம்பவங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூடு மற்றும் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் கூடுதலாக ராணுவம் 
குவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினருக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சண்டையில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியான பர்கான்வானி உள்பட 3 பேர் சுட்டுக்
 கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாத அமைப்பினர் காஷ்மீரில் நேற்று முழு அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தெற்கு காஷ்மீரில் அனந்த நாக், பார முல்லா உள்பட 4 மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குர்காம் நகரில் பா.ஜனதா அலுவலகம்
 தாக்கப்பட்டது.
போலீஸ் நிலையங்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் தங்கியுள்ள முகாம்களை குறிவைத்து பிரிவினைவாத அமைப்பினர் தீவைப்பு, கல்வீச்சு போன்ற தாக்குதல் நடத்தினார்கள். வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தடியடி மற்றும் துப்பாக்கிசூடு
 நடத்தினார்கள்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூடு மற்றும் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 4 காவல்நிலையங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அம்மாநில அரசு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு பிரிவினைவாத அமைப்புகளுக்கு கோரிக்கை
 விடுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>