This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 August 2016

குழந்தை.மூன்று நாள் பசியோடு அம்மா இறந்துவிட்டது தெரியாமல்.இருந்தசோகம் .

காவல்துறையினரே அழுத சோகம்! பெங்களூரில் வாழும் கரோலின் ஜெபாரதன் தம்பதிகள் சாப்ட் வேர் கம்பெனியில் வேலை செய்தவர்கள். ஒரே ஒரு குழந்தை. ஒரு இரவில் ஏற்கனவே கரோலினை ஒரு தலையாய் காதலித்து ஏமாந்த அத்தை மகன் உறவு கொண்டாடி வந்து வஞ்சகமாக கணவன் மனைவி இருவரையுமே கொலை செய்துவிட்டு 
தப்பிவிட்டான்.
என்ன நினைத்தானோ அந்த பாவி குழந்தையை விட்டு விட்டான். தனி வீடு என்பதால் இவர்கள் கொலை செய்யப்பட்டது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உடனே தெரியவில்லை
இரண்டு நாட்கள் கழித்து ஒரு சந்தேகத்தில் வீட்டின்
 உள்ளே பார்த்த போது அதிர்ந்து விட்டனர்.அலறியபடி போலீசுக்கு தகவல் கொடுக்க அம்மாவை அணைத்தபடி படி பசியால் சுருண்டு கிடந்தது குழந்தை.
காவல்துறையினரே அழுது விட்டார்களாம்! பின் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி கரோலின் அப்பா அம்மாவிடம் ஒப்படைத்தார்கள் ..கொடுமை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



22 August 2016

யாத்திரை செல்வொருக்கான இந்தியா விசா இலவசம் !

இந்தியாவிற்கு புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரை செல்வொருக்கான விசா இலவசமாக வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ஆர்.கே. சிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரதி இந்தியத்தூதுவர் ஆரிநாதம் பாக்சீ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் ஈசா ஸ்ரீவாத்வச ஆகியோரின்ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே உயர்ஸ்தானிகர் ஆர்.கே.சிங்கா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா மீதான நல்லெண்ணத்தை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவின் சுற்றுலா கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும்இந்திய அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


14 August 2016

அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது பலத்த பாதுகாப்பு

காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையும் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து 
கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்கான் வானி கடந்த 8–ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை பரவி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவார முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு
 இருந்தனர்.
எனினும் நேற்று மாலையில் இந்த யாத்திரையை மீண்டும் தொடங்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதைத் தொடர்ந்து பகவதிநகர் அடிவார முகாமில் தங்கியிருந்த 3,500 பக்தர்கள் பல்தால் மற்றும் பகல்காம் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். வன்முறை மற்றும் போராட்டங்கள் காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

11 August 2016

இந்திய பிரஜைகள்சுற்றுலா விசாவில் வந்து நெல் அறுவடை செய்தவர்கள் கைது


சுற்றுலா விசாவில் வந்து நெல் அறுவடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு இந்திய பிரஜைகளை சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது, சம்மாந்துறை வயல் பிரதேசத்தில் குறித்த இருவரும் நேற்று (புதன்கிழமை) நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குறித்த இரு சந்தேகநபர்களையும் சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

10 August 2016

ரயிலில்.. மேற்கூரையை உடைத்து ரூ.5.75 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் கொள்ளை!

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான, 23 டன் எடையுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்தபோது, ரயிலின் மேற்கூரையை உடைத்து கொள்ளையர்கள் ரூ.5.75 கோடி பணத்தை, துணிகரமாக கொள்ளையடித்து சென்ற
 சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் வங்கிக்கு சொந்தமான ரூ.342 கோடி (23 டன் எடை) பழைய ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தனியாக ஒரு பெட்டி ரிசர்வ் 
செய்யப்பட்டிருந்தது.
சென்னை எழும்பூருக்கு இன்று காலை 4 மணிக்கு ரயில் எழும்பூர் வந்துள்ளது. பிறகு சேத்துப்பட்டிலுள்ள யார்டுக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டது. காலை 11 மணியளவில், பணத்தை எடுக்க சென்ற ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், பணம் வைக்கப்பட்டிருந்த 228 பணப் பெட்டிகளில் 16 பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளேயிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தினர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் 
ஆய்வு நடத்தினர்.
ரயிலின் மேற்கூரையில் ஓட்டை போட்டு உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரயில், உளுந்தூர்பேட்டை, விருதாசலம் உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்களில் நின்று வந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்கள் குறித்து காட்சி பதிவாகியிருக்கலாம் 
என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கொண்டுவரப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.342 கோடியாகும். அதில் திருடப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி
 என்று மாலையில் அதிகாரிகள் அறிவித்தனர். காலை முதல் மாலைவரை பணத்தை 
கணக்கெடுக்கும் பணி நடந்து வந்தது. தமிழக சட்டசபை தேர்தலின்போது 3 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரிசர்வ் 
வங்கி பணத்தை சுற்றியே இன்னும் மர்மம் விலகவில்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தொடர்பான மற்றொரு பணப் பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது