டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான அரியானாவில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு மாநிலங்களின் எல்லைபகுதிகளில் இந்த நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் 10 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏதும்
ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் 3.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment