This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

21 November 2018

பெருங்கடலுடன் பல வருடங்களின் பின்னர் சங்கமித்த நந்திக்கடல்

முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை
 காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் இயற்கையாகவே பெருங்கடல் நோக்கிச் செல்வது முன்னர் வழக்கமாக இருந்தது.இந்
த நிலையில், பல வருடங்களின் பின் இயற்கையாகவே 21.11.2018. அதிகாலை உடைப்பெடுத்துள்ளதாக மீனவர்கள்
 தெரிவித்துள்ளனர்.
  அண்மைக்காலமாக முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழையால் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், இன்று நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>




20 November 2018

நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம்..? பெரும் அச்சத்தில் மீனவர்கள்

நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம் கடத்தப்படுவதாக தெரிவித்து குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு – 
வட்டுவாகல் பகுதியில், இன்று காலை, தூண்டில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் தூண்டில் அதி உயர் மின்கம்பியில் சிக்கியுள்ளது.இவ்வாறு சிக்கிய தூண்டிலின் தங்கூசி நூல் அதி உயர் மின்கம்பியில் சிக்கி நந்திக்கடல் நீருடன் தொட
ர்புபட்டுள்ளது.  இதனால், தூண்டில் நூலில் ஏற்படும் ஈரத்தன்மையூடாக அதி உயர் மின்சாரம் நந்திக்கடலில் கடத்தப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




16 November 2018

ஆறு மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் வாகனங்கள் இயக்க தடை

சென்னை (13 நவ 2018): கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் சென்னைக்கு 
வட கிழக்கே 860 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்ட, இந்த புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது திசை மாறியுள்ள இந்த புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை 
கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில்
 தற்போது நிலை கொண்டுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும். தற்போது நிலவரப்படி 
14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த 
காற்று வீசும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் 
உயரும். மிக கனமழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை 
பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும். புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும். பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக குறிப்பிட்டு இருக்கிறோம். இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை. இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு
 இருக்கிறோம்.
20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும் நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை கடக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
 இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க, நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க
 முடியும் என்றும் இப்போதைக்கு புயல் தாக்கும் அபாயம் நீடிப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்க தொடங்கும். பகல் 12 மணி அளவில் கடலூர்-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும். இந்த புயலின் தாக்கத்தால் சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை என்றாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலை எதிர்கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறும்போது, ‘மழை பாதிப்பு குறித்து விரைந்து அறிந்து கொள்ள டி.என்.ஸ்மார்ட் என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதையை சூழ்நிலையில் 4,400 இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்று
 தெரியவந்துள்ளது. அந்த பகுதிகளில் எல்லாம் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையே, கஜா புயலை எதிர்கொள்வது குறித்தும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு வழங்கினார். புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கும் மக்களை உடனடியாக மீட்பது, தற்காலிக தங்கும் இடங்களை உருவாக்குவது, தீயணைப்பு
 வாகனங்களை தகுந்த இடங்களில் நிறுத்துவது, முக்கியமான இடங்களில் மருத்துவ முகாம் அமைப்பது, பாதிப்பு மிகுந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினரை அதிகமாக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, நேற்று மாலை தலைமை செயலகத்தில், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்துரையாடினார். அப்போது அவர் கஜா புயல் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுரைகள்
 வழங்கினார்.


17 October 2018

வாழை இலையில் உணவருந்தியதால் மரணம்

இந்தியாவில் வீடொன்றில் வாழை இலையில் உணவருந்தியதால் ஒட்டு மொத்த குடும்பமே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், அவர் உணவருந்திய வாழை இலையில் வவ்வால்களில் மூலம் பரவிய வைரஸ் கிருமிகள் இருந்தாகவும், மேலும் வாழை இலையை அவர்கள் நன்கு கழுவாமல் விட்டதாலே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இனி வாழை இலையை முன் புறம் மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவமால் இருபுறமும் நன்கு கழுவி விட்டு, உணவருந்தவும் என தெரிவித்துள்ளனர்.
உலகம்,பதுவானவை
நிலாவரை.கொம் செய்திகள் >>>








21 September 2018

இந்தியாவில் மின்சாரம் மூலம் இயங்கும் கார்கள், பேருந்துகள்

நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் புவி வெப்பமயமாதலுக்கு இந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பலநாடுகள் மின்சாரம் மூலம் இயங்கும் கார்கள், பேருந்துகள் பயன்பாட்டுக்கு
 கொண்டுவந்துள்ளன.
இதில், இந்தியாவிலும் முக்கிய தலைநகரங்களில் பட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முதல்கட்டமாக 80 பட்டரி மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோவையில், 20 பேட்டரி மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாகத்
 தெரிவித்துள்ளார்.
கடந்த 2 தினங்களுக்கு முன் இலண்டன் சென்று வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் பேட்டரி மூலம் பேருந்துகள் இயக்க, அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்டரி பேருந்துகளின் இயக்கத்தை 
பார்வையிட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘புவி வெப்பமயமாதலை தடுக்கவும், காற்று மாசுபடாமல் காக்கவும், உலகம் முழுவதும் பட்டரி பேருந்துகள் இயக்கப்படுவதுபோல் தமிழகத்திலும் கொண்டு வர லண்டனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்டரி பேருந்துகளின் இயக்கத்தை பார்வையிட்டேன்.
தமிழகத்தில் பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கு ‘பட்டரி சார்ஜிங் நிலையம்’ அமைக்க ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, தமிழகத்தில் முதல் கட்டமாக தலைநகர் சென்னையில் 80 பட்டரி பேருந்துகளும், கோவையில் 20 பட்டரி பேருந்துகளும் இயக்கப்படும். இதன் காரணமாக காற்று மாசுபடுவதையும், புவி வெப்பமயமாதலையும் 
தடுக்க முடியும்.
மேலும், பேருந்து பராமரிப்பு செலவுகள் குறையும். இந்த பட்டரி பேருந்து விலை 2 கோடி ருபாய். இந்த பேருந்தில் 20 இருக்கைகள் இருக்கும். இதில் சுமார் 100 பேர் வரை நின்று கொண்டே பயணம் செல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


08 August 2018

மகனைக் கொன்று எரித்து தடயங்களை அழித்த தந்தை!

போதை பழக்கதிற்கு அடிமையான மகனை தந்தையே எரித்த கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் அறங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன். இவர் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் தந்தை பாலசுப்பிரமணியுடன் தகராறும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் இரவு வழக்கம் போல 
குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையுடன் மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தந்தை மகன் மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த தந்தை பாலசுப்பிரமணி உறவினர்கள் சிலரை துணைக்கு சேர்த்து நேற்றும் நள்ளிரவில் மணியின் உடலை சுடுகாட்டில் வைத்து எரித்து கொலை செய்த தடயங்களையும் மறைத்துள்ளார்.பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அவர்கள் தந்தை பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் அவரது உறவினர்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



12 July 2018

மோட்டார் சைக்கிளில் தாயின் சடலத்தை சுமந்து சென்ற மகன்!!

ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் 
குன்வார் பாய்.
சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர்
 இறந்து விட்டார்.
இதுதொடர்பாக ராஜேஷ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு
 வரும்படி கூறினார்கள்.
ஆனால், உடலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல பொலிஸார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் தனது தாயின் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.
அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீற்றர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.சிலர் இந்த காட்சிகளை கைத்தொலைபேசியில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


10 July 2018

மனைவியை பேருந்து நிலையத்தில் வெட்டி கொன்ற கணவன்

தமிழகத்தின் ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டி கொன்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவாட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மதீஸ்வரனும் கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர் 
பிரியாவும் நான்கு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெண் குழந்தை பிறந்த
 பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவனிடம் வளரும் மகளை தன்னிடம் பெற்று தரகோரி பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
. கடந்த 20ம் திகதி கேரளா திரும்ப ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பிரியாவை அவரது கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


05 July 2018

அரைமணிநேரம் தண்ணீரில் மிதந்து உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்

பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது நிரம்பிய திருவண்ணாமலை சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்
 7ஆம் வகுப்பு மாணவன் சிவகுரு. இவர், பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக யோகாசனம் மூலம் கின்னஸ் சாதனை
 முயற்சியில் ஈடுபட்டார்.
தண்ணீரில் மிதந்துவாறு அரைமணிநேரம் சவாசனம் அல்லது சாந்தியாசனம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
புவியை பெருமளவிற்கு மாசுபடுத்தி வரும் பாலித்தீன் ஒழிப்புக்காக அல்லது பயன்பாட்டினை குறைக்க விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறுவன் மேற்கொண்ட முயற்சி பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

23:52 05.07.201

03 July 2018

ரோல்ஸ் ராய்ஸ் கார் மணமக்கள் பயணிக்கும் வகையில்

: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹமீத் கான் என்பவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை திருமண ஊர்வலத்தின்போது மணமக்கள் ஒய்யாரமாக
 அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு ராயல்ஸ் வெட்டிங் கார் என பெயர் சூட்டிய அவர், அதிக லாபத்திற்காக இந்த ஏற்பாட்டை செய்யவில்லை, நடுத்தர மக்களும் செல்வந்தர்கள் போல் உணர வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காப்பாற்றுவதாக வாக்களித்த சாமியார்!! அம்பலத்திற்கு வரும் சங்கதிகள்

 டெல்லியில் 11 பேர் மர்மமான முறையில் உயிரிழ்ந்த விடயத்தில் சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிசார் குறித்த சாமியாருக்கு வலை 
விரித்துள்ளனர்.
டெல்லி புராரி பகுதியிலுள்ள வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.அந்த வீட்டில் பொலிசார் நடத்திய விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சைலன்ட் மோடில் போன்
குறித்த வீட்டில் துணி வைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலன்ட் மோடில் இருந்துள்ளது. அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்து இருந்துள்ளனர்.இதற்கும் கூட, என்ன காரணம் என்று பொலிஸ் கண்டுபிடித்துள்ளது. அதன்படி, இந்த முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது. அதை பக்கத்தில் வைத்துக் கொள்ள கூடாது என்று ஒரு சாமியார் சொல்லி இருக்கிறார
அந்த செல்போன் உரையாடலின் படி ஒரு பிரபல சாமியாரிடம் இந்த குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி போனில் பேசி இருக்கிறார்கள். அந்த போன் ரெக்கார்டுகள் எல்லாம் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யார் அந்த சாமியார் என்ற தகவலை இதுவரை பொலிசார் வெளியிடவில்லை.
தற்போது அந்த சாமியார் இருக்கும் இடத்தை பொலிஸ் கண்டுபிடிக்கும் முடிவில் உள்ளது.அங்கு கிடைத்த டைரி குறிப்பில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருந்துள்ளது. அதில், நீங்கள் எல்லாம் மிகவும் நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள்.
உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது. நீங்கள் தூக்கு மாட்டி சடங்கு செய்யுங்கள்.ஏதாவது தவறாக நடந்தால், கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என்று அந்த மர்ம சாமியார் கூறியதாக டைரியில் எழுதப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


26 June 2018

நூறு நாக பாம்புக் குட்டிகள்…வீட்டிற்குள் வாழ்ந்த அதிர்ச்சிதகவல்

வீட்டுக்குள் இருந்த 100 நாகப்பாம்புக் குட்டிகளைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிஜே புயான். இவரின், வீட்டில் மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்திருக்கிறார்.
பாம்பு இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் அஞ்சிய குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதையடுத்து பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு
 ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.பிஜே புயான் வீட்டுக்கு விரைந்த மீட்புக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பல மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒன்று, இரண்டு குட்டிகள் அல்ல. சுமார் 100ற்க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள் குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்வதைக் கண்டு அதிர்ச்சியில் 
உறைந்தனர். இதையடுத்து, வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், நாகப் பாம்புக் குட்டிகளைப் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர்.மேலும், நாகப்பாம்பு குட்டிகளின் தாய் நாகப் பாம்பை, பிடிக்க அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர் கிராம வாசிகள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


25 June 2018

மணமகன் நகை பணத்திற்கு பதில் வரதட்சனையாக மணமகன் கேட்ட பொருள்!!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜ்காந்த் பிஸ்வால் (33) என்னும் ஆசிரியருக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவுக்கும்
 திருமணம் நிச்சயமானது.திருமணத்திற்கு முன்பாக சரோஜ்காந்த் மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். அதற்குப் பதிலாக மரக்கன்றுகளை பரிசாகக் கொடுங்கள்
 எனகேட்டிருக்கிறார். 
இதை மணமகளின் தந்தையும் ஒப்புக்கொள்ள,கடந்த 22-ந்தேதி சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகளின் தந்தை மரக்கன்றுகளை வரதட்சணையாக அளிக்க, அதை மணமக்கள் தங்களை வாழ்த்த வந்தவர்களுக்கு 
அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.நகை, பணத்திற்குப் பதிலாக மரக்கன்றுகளை இளைஞர் வரதட்சணையாகப் பெற்ற சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


09 June 2018

மயக்கும் பஞ்சாப் பெண்ணின் கலக்கல் நடனம் காணொளி

தற்போதைய காலகட்டத்தில் இணையத்தளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விளங்குகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையத்தளம் இருந்து வருகின்றது.முன்பு 
போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரக்க சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இனையத்தில் பதிவிட்டால் பொதும். கருத்துக்கள் வந்து குவியும்.
இதற்க்கு மட்டும் இல்லை நடனம், இசை, பாட்டு ,போன்ற பல கலைத்திறன்களை வெளிகொண்டு வரவும் சமூக வலைத்தளம் ஒரு உந்துகோலாக விளங்குகிறது.
இந்நிலையில், பிரபலமான பஞ்சாபி எண் ‘டரு பாட்னாம்’ என்ற பெண்ணின் நடன வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை You tube இல் பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே 2,528,374 பேர் பார்த்துள்ளனர். உங்களுக்காக இந்தக் காணொளி இதோ…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

06 June 2018

இளைஞர்களின் நடவடிக்கையினால் யாழில் ரஜினிக்கு ஏற்பட்ட அசிங்கம்

தென்னிந்திய பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் காலா படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நா
டாகாவில் இப்படத்தை திரையிட மாட்டோம் என அங்கு
 பல எதிர்ப்புகள் அதிகரித்து 
வருகின்றன. படகுழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விட்டன.இந்தச் சமயத்தில் யாழ்பாணத்தில் இளைஞர்கள் காலா படத்தின் போஸ்டர் முன் 
செருப்பை காண்பித்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வீரமண்ணில் கோழையின் படத்தை திரையிட விடமாட்டோம் எனகு; கூறி வருகின்றனர். இந்த செருப்படி காலாவிற்கு மட்டமல்ல அதை ஆதரிக்கும் அனைவருக்கும் தான் என எச்சரித்ததுடன் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





ஹொட்டல் முதலாளியை போட்டுத் தள்ளிய வாடிக்கையாளர்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை 190 ரூபாவிற்கு விற்ற ஹொட்டல்காரரை வாடிக்கையாளர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின்  வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. இப்போதுதான் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர்
 பெயர் சஞ்சய் மண்டல் என்று தெரியவந்துள்ளது.மேற்கு வங்கத்தில் சம்பவம் ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார் சஞ்சய் மண்டல். 4 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பிரியாணிக்கு பணம் கொடுக்க சென்றுள்ளனர்.
அப்போது இந்த விலை ரொம்பவே அதிகம் என்று சஞ்சய் மண்டலுடன் அந்த நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.துப்பாக்கி சூடு சாப்பிட்டுவிட்டு பணம் தரப்போகும் நேரத்தில் விலையை பற்றி பேசுவதா என்று சஞ்சய் மண்டல் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இரு தரப்புக்கும் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அப்போது, நண்பர் கூட்டத்தில் ஒருவர் தன்னிடமிருந்த
 கைத் துப்பாக்கியால் திடீரென சஞ்சய் மண்டலை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நால்வரும் தப்பியோடியுள்ளனர்.சுட்டது யார்? அங்கிருந்தவர்கள் உடனடியாக சஞ்சய் மண்டலை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
 ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சஞ்சய் மண்டல் 
பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சஞ்சய் மண்டல் சகோதரர் போலீசாரிடம் இது குறித்து கூறும் போது;  முகமது பைரோஸ் என்பவர்தான் துப்பாக்கியால் 
சுட்டது என்று அடையாளம் காட்டியுள்ளார்.இதையடுத்து முகமது பைரோஸை பொலீசார் கைது செய்துள்ளனர்.
 அவருடன் அன்று பிரியாணி சாப்பிட்டு தகராறு செய்த பிற நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பொலீசார் தேடி வருகிறார்கள். பிரியாணி தகராறில் ஓட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


22 May 2018

பொதுமக்கள் மீது பொலிஸ் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு பத்துப் பேர் பலி! பலர் படுகாயம்

ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி, 17 வயது பள்ளி மாணவியையும் சுட்டு கொன்றுள்ளது காவல்துறை. கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில் 10பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய 2 துப்பாக்கிச் சூடுகளில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், “எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு” என்பதுதான்.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது.

ஆனால், இதுகுறித்து தமிழக அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில், போராட்டத்தை வீரியமடையச் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக காவலர்கள் தடியடி நடத்தி போராட்டத்தினைக் கலைக்க முயற்சி செய்தனர். இதில் பொதுமக்கள் சிலர் படுகாயமடைந்ததால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவலர்களை கற்களை கொண்டு திருப்பி தாக்க ஆரம்பித்தனர்.

இதனால் பயந்துபோன காவல்துறை செய்வதறியாது திகைத்து போராட்டத்தினை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டினை பயன்படுத்தியது. தமிழக காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூட்டினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொந்த மண்ணிலே உரிமைக்காக போராடிய தமிழக மக்களை கொன்றொழிப்பதா என தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை. இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல்என்கிறார்கள் 
நெட்டிசன்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




16 May 2018

நிகழ்ச்சியுடன் பரீட்சையில் தோல்வியடைந்த மகனுக்குத் தந்தை விருந்து

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு விருந்து வைத்த தந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்தியபிரதேச மாநிலம் சாகம் மாவட்டம் டிலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ், கட்டிட ஒப்பந்ததாரரான இவரது மகன் அன்சு 10ஆம் வகுப்பு 
தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஆனால், அன்சு தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் மனவேதனையடைந்த அவர், தந்தையை சந்திக்க கலக்கத்துடன் சென்றுள்ளார்.ஆனால், அன்சுவின் தந்தையின் மகன் மீது எந்தவித வெறுப்பையும் காட்டாமல், அவரைக் கட்டித்தழுவி இனிப்பு ஊட்டினார்.
அத்துடன், தனது மகனின் தோல்வியை கொண்டாட முடிவு செய்த அவர், அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார்.பின்னர், அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விருந்து வைத்தார் சுரேந்திரகுமார். அவரின் இந்த செயலைக் கண்ட அன்சு உட்பட அனைவரும்
 வியந்தனர்.
இதுதொடர்பாக சுரேந்திரகுமார் கூறும் போது ‘தேர்வுக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வியடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். தேர்வில் தோல்வியடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பள்ளியில் நடைபெறும் அரசு தேர்வு என்பது மாணவரின் கடைசி தேர்வு அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.மாணவர் அன்சு கூறும் போது;  எனது தந்தையின் விருந்து கொண்டாட்டம் என்னை அடுத்த ஆண்டு தேர்வுக்கு மிகவும் ஊக்கப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



12 May 2018

சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது பெண்!!

இந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின் அக்காள் மகளான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
சிறுவனும் குறித்த பென்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதன் காரணமாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.சிறுவனும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில்
 வைரலாக பரவி வருகிறது.
இப்படி ஒரு திருமணம் நடைபெற்றிருந்தாலும், 13 வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும் 23 வயது இளம்பெண்னுடன் அவரது பெற்றோர்கள் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள் என்பது சர்ச்சையை 
ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும், இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்த பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சமூக 
ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இதே ஆந்திராவில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண் 17 வயது சிறுவன் தன்னை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



02 May 2018

கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகள் வீதியில் வசிக்கும் பரிதாபம்

         பிரபல நடிகர் ஜாக்கிசானின் இளையமகள் எட்டா நங், தான் தங்குவதற்கு வீடு இன்றி பாலத்தின் அடியில் வசித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது 
குறிப்பிடத்தக்கது.
, இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், நானும் எனது தோழி ஆண்டி ஆன்ட்டும் வசிப்பதற்கு வீடு இன்றி பாலத்தில் வசித்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது
 புனிதமான அன்பு.
எங்களுக்கு உதவி செய்யுமாறு எனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் உதவி கேட்டோம். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனது தந்தை 395 மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரர். அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், எங்களை பிரித்துவிடுவார்களே என பயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை புரிந்துகொண்டு உதவி செய்ய முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.
ஹாங்காங்கின் முன்னாள் அழகி எலா நங்க்கும்- ஜாக்கி சானுக்கும் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர் தான் எட்டா நங். ஜாக்கி சானுக்கு 1982 ஆம் ஆண்டு ஜோன் லிம் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
தனது மகளின் நிலை குறித்து ஜாக்கிசான் பெரிதாக கருத்து கூற முன்வரவில்லை. ஒரு தந்தையாக எனது மகள் விடயத்தில் நான் தோல்வியடைந்துவிட்டேன், இதனை எப்படி அணுகுவது என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



18 April 2018

யாழில் கேரளா கஞ்சாவுடன் வசமாக மாட்டிய மூவர்;

யாழ்ப்பாணம் சங்குபிட்டியில் வைத்து 35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் 11 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அதிகாரி ரொஷான் பெர்ணாண்டோ தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை
 முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து பட்டா ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட மூவரும் புத்தளத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






தாஜ்மகால் உரிமை எவருக்கும் இல்லை. மத்திய அரசு அதிரடி

தாஜ்மகாலை நிர்வகிக்கும் உரிமையை எந்த அமைப்புக்கும் கொடுக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற 
விசாரணையின்போது தாஜ்மகாலின் உரிமை தொடர்புடைய ஆவனங்களை ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு, தாஜ்மகால் உரிமையை எந்தவொரு அமைப்புக்கும் கொடுக்க முடியாது 
என கூறி உள்ளது.
2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் தாஜ்மகாலைத் தங்களுடைய சொத்து எனப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி
2010ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாஜ்மகாலின் உரிமையை ஷாஜகான் வக்பு வாரியத்துக்கு எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து ஷாஜகான் எழுதிக்கொடுத்த உரிமைப் பட்டயத்தை நீதிமன்றத்துக்குக் காட்ட வேண்டும் என வக்பு வாரியத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு , உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தாஜ்மகாலை பராமரிக்கவும், வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியாது என்றும் விசாரணையின்போது மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
அதனை தொடர்ந்து அந்த வழக்கின் விசாரணையை ஜுலை 27 ஆம் திகதிக்கு மீண்டும் உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்வதாக
 அறிவித்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



16 April 2018

குழந்தையை இரண்டு லட்சம் ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது!!

கோவாவில் 11 மாத ஆண் குழந்தையை, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கோவாவில் போண்டா நகரில் வசிக்கும் ஷைலா பாடீல், என்ற பெண் கணவனுக்கு தெரியாமல் பணத் தேவைக்காக
, தனது குழந்தையை இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.அதன்படி கடந்த மார்ச் 23ம் திகதி திருமணமாகி குழந்தையில்லாத அமர் மோர்ஜேயிடம் இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட ஷைலா, குழந்தையை அவரிட
ம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், வெளியூரில் இருந்து திரும்பி வந்த ஷைலாவின் கணவர், குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.விசாரணை நடத்திய போலீசார், ஷைலா உட்பட குழந்தையை விற்பதற்கு உதவிய நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>