Search This Blog n

16 April 2018

குழந்தையை இரண்டு லட்சம் ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது!!

கோவாவில் 11 மாத ஆண் குழந்தையை, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கோவாவில் போண்டா நகரில் வசிக்கும் ஷைலா பாடீல், என்ற பெண் கணவனுக்கு தெரியாமல் பணத் தேவைக்காக
, தனது குழந்தையை இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.அதன்படி கடந்த மார்ச் 23ம் திகதி திருமணமாகி குழந்தையில்லாத அமர் மோர்ஜேயிடம் இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட ஷைலா, குழந்தையை அவரிட
ம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், வெளியூரில் இருந்து திரும்பி வந்த ஷைலாவின் கணவர், குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.விசாரணை நடத்திய போலீசார், ஷைலா உட்பட குழந்தையை விற்பதற்கு உதவிய நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

Post a Comment