யாழ்ப்பாணம் சங்குபிட்டியில் வைத்து 35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் 11 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அதிகாரி ரொஷான் பெர்ணாண்டோ தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து பட்டா ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட மூவரும் புத்தளத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment