Search This Blog n

27 February 2019

இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் மூளும் ஆபத்து

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம்தற்போது டெல்லியை மையப்படுத்திய வான்பரப்பை இந்தியா அவசரமாக மூடும் சூழல் முதல் எல்லையில் இரண்டுதரப்பும் கடும் எறிகணைகளை வீசிவரும் நிலைமைவரை நகர்ந்துவிட்டது.இன்று இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானிய போர்விமானங்கள் பிரவேசித்ததையடுத்துஇந்தியத்தரப்பில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியில் ராணுவத்தினலும் எல்லைப்பாதுகாப்புப் படையினர், குவிக்கப்பட்டுவருகின்றனர்.
அத்துடன் இந்தப் பிராந்தியங்களில் உள்ள சகல பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுன. இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.இதற்கிடையே காஷ்மீர் ரஜவுரி பகுதியில் பறந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான எப்-16 ரக விமானத்தை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக
 கூறப்படுகிறது.
இதற்குப்பதிலாக ஜம்மு, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் முளில்நேற்று இரவு முதல் பாகிஸ்தானிய ராணுவம் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் இதற்குப்பதிலடியாக
 இந்திய ராணுவம்; 5 பாகிஸ்தானிய நிலைகளை அழித்ததாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், அடுத்த 72 மணிநேரத்துக்குள் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், அது இரண்டாம் உலகப்
போரைக் காட்டிலும், மிகப்பெரியதாக இருக்கும் என்று பாகிஸ்தானியத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்துவரும் 3 நாட்கள் மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்துவரும் நாட்களில் போராக மாறலாம், அல்லது அமைதிக்கும் திரும்பலாம் என பாகிஸ்தானியத் தரப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment