This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

16 April 2019

ஒடிசாவில் நிர்பய் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையான டி.ஆர்.டி.ஓ. பல்வேறு சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 
அவ்வகையில், கடல், ஆகாயம் மற்றும் 
தரையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை குறிதவறாமல் தாக்கி அழிக்கவல்ல ´நிர்பய்’ 
ஏவுகணை ஒடிசாவில்15,04,, 2019, இன்று வெற்றிகரமாக 
பரிசோதிக்கப்பட்டது. 
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் கடல்பகுதியில் உள்ள ஏவுதளத்தின் மூன்றாவது முனையத்தில் இருந்து இன்று காலை 11.44 மணிக்கு ஏவப்பட்ட ´நிர்பய்’ ஏவுகணை 42 நிமிடம் 23 வினாடிகள் தொடர்ந்து பறந்து, நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை 
அதிகாரிகள் தெரிவித்தனர். 
விண்ணில் அதிக உயரத்தில் பறந்து தாக்குவதுடன் தரைமட்டத்தில் சுமார் 100 மீட்டர் உயரத்தில் பறக்கு இலக்கையும் மணிக்கு சுமார் 865 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கும் திறன் ´நிர்பய்’ ஏவுகணைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



15 April 2019

ஒருபோதும்தமிழன் கண்ணீரில் தாமரை மலராது சீறிய சீமான்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 
கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் தாமரை மலரவே மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம். தமிழன் நிலத்தில் ஒருபோதும் தாமரை மலராது” என்று பேசினார். அதேபோல கன்னியாகுமரியில் இன்று நாம் தமிழர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், “இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை மடையர்கள் கூட்டம் என கருதி
 இவர்கள் ஆட்சி செய்வது?
மக்கள் ஏழையாகிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். 72 ஆண்டுகால விடுதலை இந்தியாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய கட்சிகள் காங்கிரஸும், பாரதீய ஜனதாவும். வெட்கமில்லாமல் வங்கியில் 6,000 ரூபாய் போ
டுவோம் என்கிறார்கள்.
விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் மோடி உங்கள் வீட்டு வாசலில் விவசாயிகள் நிர்வாணமாக நின்றபோது ஏன் அக்கறை காட்டவில்லை? மக்கள் மீது அதீத பற்று வைத்திருக்கும் மோடி கடந்த ஐந்தாண்டு ஆட்சியின்போது நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்நேரத்திற்கு நிறைவேற்றியிருக்கலாமே”
 என்று பேசினார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


06 April 2019

இந்திய வெளியுறவு அதிகாரி போல் அரசாங்கத்திற்கே பெப்பே காட்டிய பெண்

இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர்.டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் இவரது கனவு, இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் 
தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசை அவரை விட்டு போகாத காரணத்தினால் தான் நினைத்ததை அடைய வேண்டும் சில குறுக்க வழிகளை கையாண்டுள்ளார்.அதன்படி, இவர் தனது 
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என போலியான ஐ.டி கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அத்துடன் போலியான இ-மெயில் ஐ.டி-யை உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி செல்போன் ஆப் மூலம் தனது குரலை ஆண் குரலாக மாற்றி பேசியுள்ளார்.இவரது கணவர் வங்கியில் வேலை செய்து, அங்கிருந்து வெளியேறியவர் என்பதால் இவருக்கு போலியான் ஐ.டி.கார்டு போன்றவைகளை ஷோயா தயாரித்து 
கொடுத்துள்ளார்.
அதன் பின் ஒரு அரசு அதிகாரி போலவே ஷோயா வலம்வர தொடங்கியுள்ளார். 18 மாதங்கள் ஒரு அரசு அதிகாரி போல் வலம் வந்துள்ளார். இவரின் இந்த திருட்டுத்தனத்தை அறியாமல் இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வேறு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், 
கடந்த வாரம் ஷோயா உத்தரப் பிரதேசம் மீரட்டில் நடந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
அங்கும் ஒரு அதிகாரி போல் வலம்வர, இவரை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் நினைத்துள்ளனர். பல காவல் அதிகாரிகளும் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர்.
இதையடுட்த்து நொய்டாவின் கவுதம் புத்த நகர் எஸ்.எஸ்.பி வைபாவ் கிருஷ்ணாவை செல்போனில் தொடர்பு கொண்ட இவர் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொலிசாரை அனுப்பிவைக்க தாமதப்படுத்தியதாக திட்டியுள்ளார்.அதன் பின்னரே இவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரது வீட்டை சோதனை செய்து போது பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் உண்மையான அதிகாரியே இல்லை போலியான ஐ.டி. கார்டை தயாரித்து 18 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் தங்கியிருந்த 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அத்துடன் 2 சொகுசுக் கார்கள், 2 லேப்டாப்கள், 2 போலி ஐ.டி கார்டுகள், 2 வாக்கி டாக்கிகள், 4 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை 
பறிமுதல் செய்துள்ளனர்.
அவரது கணவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் கோ டாடி என்ற இணையதளத்தில் பணம் செலுத்தி போலியான இணைய தளம் ஒன்றையும் உ
ருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அரசியல் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் போலியான ஐ.டி கார்டு,
 தயாரித்து மோசடியில் ஈடுபடும் நபர் தான் என்றும், இவருக்கு வெளிநாட்டில் இருக்கும் ஏஜென்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும்தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>