20 December 2019
கூடல்நகா் இலங்கை அகதிகள் முகாமில் 36 பேருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண்களின் பெயரைப் பயன்படுத்தி 50 இலட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து கூடல்நகா் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 36 பெண்கள் அளித்த புகாா் மனு:
ஆர். டயானா.. நான் வசிக்கும் முகாம் அருகில் தமிழ் நகரைச் சோ்ந்த தெய்வம் மனைவி காஞ்சனா என்பவா் வசித்து வருகிறாா்.
அவருக்கு முகாமில் வசிக்கும் பெண்களுடன் 15 ஆண்டுகளுக்கு
மேல் பழக்கம் உள்ளது.
இந்நிலையில், சுய உதவிக்குழுக்களில் கடன் பெற்று தருமாறு கல்பனா என்னிடமும், முகாமில் உள்ள பெண்கள்
சிலரிடமும் கேட்டாா்.
கடன் பெற்று தந்தால் முறையாக திருப்பிச் செலுத்துவதாகவும் கூறினாா். இதை நம்பி அவருக்கு முகாமைச் சோ்ந்த நான் உள்பட 37 பெண்கள் ரூ. 50 லட்சம் கடன் பெற்று தந்தோம்.
அந்த கடன் தொகைக்கான தவணைகளை காஞ்சனா சில மாதங்களுக்கு திரும்பச் செலுத்தினாா்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக கடன் தொகையைச் செலுவில்லை. கடன் கொடுத்தவா்கள் எங்களிடம் கேட்டாா்கள். இதுதொடா்பாக காஞ்சனாவிடம் கேட்டபோது சில நாட்களில் கடன் தொகையைத் திரும்பச் செலுத்திவிடுதாகக் கூறி வந்தவா் திடீரென்று
தலைமறைவாகி விட்டாா்.
இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் முகாமிற்கு வந்து தொடா்ந்து பிரச்சினைச் செய்து வருகின்றனா்
இது குறித்து கூடல்புதூா் காவல்நிலையத்தில் நவம்பா் 21ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காஞ்சனா குடும்பத்தினா், மோசடி செய்த பணத்தை கொண்டு பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி உள்ளனா்.
மேலும் கூடல்நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் வீடு கட்டியுள்ளனா்.
எனவே, காஞ்சனா மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவா் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, டயானா மற்றும் 36 பெண்கள் மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்திற்கு சென்று ஆணையரிடம் புகாா்
மனுவை நேரில் அளித்தனா்.
புகாா் மனுவை பெற்ற காவல் ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட
பெண்கள் கூறியது:
பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் கூலி வேலை செய்து
குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
சுயஉதவிக் குழுக்கள் மூலம் மட்டும் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் மோசடியில் காஞ்சனா ஈடுபட்டுள்ளாா்.
இதை தவிா்த்து முகாமில் பலரிடம் நகை, ரொக்கம்
என ரூ. 4 கோடி வரை பெற்றுள்ளாா்.
காவல்நிலையத்தில் புகாா் கொடுத்து ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து காவல் நிலையத்திற்கு கேட்க சென்றால் பொலிஸாா் தகாத வாா்த்தையால் திட்டுகின்றனா்
என தெரிவித்தனா்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
17 December 2019
இலங்கைக்கு படகு மூலம் தப்பித்த ஈழ அகதிகளுக்கு தனுஸ்கோடியில் நேர்ந்த கதி
தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற 6 இலங்கை அகதிகளை கீயூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று ( திங்கட்கிழமை) கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பேரூந்த நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
குறித்த விசாரணையில், அவர்கள் திருகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகளான சதீசன், டிலக்சனா, சுதாகரன், சந்திரமதி, ஹரீஸ்கரன்,உதயகுமார் என இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகிய ஆறு
பேரும் சென்னை மற்றும் திருவள்ளுர் பகுதிகளிலுள்ள முகாம்களில் வசித்து வந்தாகவும், தனுஸ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில்தோணி ஊடாக இலங்கைக்கு
தப்பி செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.இதனையடுத்து குறித்த ஆறு பேரையும் கைது செய்த கீயூ பிரிவு பொலிஸார், வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குறித்த விசாரணைக்கு
பின்னர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள், காவல் துறையினர் விசாரணையின்போது, தாங்கள் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது தங்களது
உயிர்களை காப்பாற்றி
கொள்ள 2012 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தற்போது இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து இலங்கை திரும்பி செல்ல தனுஸ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் நின்றதாகவும் தெரிவித்தனர்.தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து செல்ல, படகோட்டியிடம் தலா 10 ஆயிரம் என 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தாகவும் ஆனால் கியூ பிரிவு பொலிஸாரை
கண்டதும் படகோட்டி படகுடன் தப்பி சென்றார் எனவும் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கை பணம் 8ஆயிரத்தி ஐந்நூறு இந்திய பணம் ஆயிரம் மற்றும் கடவுச்சீட்டு, இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கி கணக்கு அட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆறு வருடங்களுக்கு பின் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய மருமகளுக்கு நேர்ந்த சோகம்
ஆறு வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை மாமியார் ஒருவர் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது
.இந்தியாவின் மகாராஷ்டிராவில் மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என்ற பயத்தில்
மருமகளை மாமியார் கொலை
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் வசாய் நகரின் மாணிக்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி மனே (வயது 48). இவரது மூத்த
மகன் ரோகன் மனே தனது மனைவி ரியா மனேவுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 6 வருடங்களுக்கு பின்னர் ரோகன் – ரியா தம்பதியினர் கடந்த முதலாம் திகதி இந்தியாவுக்கு சென்றிருந்தனர். மாமியார் – மருமகள் இடையேயான வழக்கமான சண்டை ஆனந்தி மற்றும் ரியா இடையே அடிக்கடி இடம்பெற்றுள்ளது.இதையடுத்து நேற்றுக் காலை ரோகன் மனே நடைபயிற்சிக்காக காலையிலேயே
வெளியே சென்றிருந்தார்.
அப்போது மாமியார் மருமகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மாமியரான ஆனந்தி மனே அங்கிருந்த இரும்பு பூந்தொட்டியை எடுத்து தனது மருமகளை அடித்தார். தலையில் தாக்கப்பட்ட ரியா மனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஆனந்தி மனே மாணிக்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், ரியா மனேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
‘ஆனந்தி மனே- ரியா மனே இடையே சில சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளன. தனது மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடமிருந்து ரியா மனே பிரித்து சென்று விடுவார் என்ற எண்ணம் ஆனந்தியிடம் இருந்தது.மருமகளை கொலை செய்த மாமியாரான ஆனந்தி சில தூக்க மாத்திரைகளையும் உட்கொண்ட நிலையில், வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
10 December 2019
தனது தங்கையை கணவனின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்த மனைவி
தாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக வினிதா என்பவரை
திருமணம் செய்துள்ளார். இந்த
தம்பதியினருக்கு
3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், திலீப் தன்னுடைய மனைவி வினிதாவிடம், அவருடைய உறவு
பெண்ணான ரச்னா என்பவரை நீண்ட காலமாக விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும்
கூறியுள்ளார்.
இதற்கு வினிதா சம்மதம் கூறியதை அடுத்து, ஒரே மேடையில் ரச்னா மற்றும் தனது மனைவியுடன் மாலை மாற்றி திலீப் திருமணம் செய்துள்ளார்.இதுகுறித்து வினிதா கூறுகையில், சில ஆண்டுகளாகவே நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்து
வருவதால் என்னுடைய கணவர் தான் குழந்தைகளை கவனித்து வருகிறார்.வேறு ஒரு பெண்ணை அவருக்கு
திருமணம் செய்து வைத்தால், குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்ள மாட்டார்கள். என்னுடைய தங்கையை திருமணம் செய்துவைத்தால், நன்றாக பார்த்துக்கொள்வார் என்பதாலே திருமணம்
செய்துவைத்தேன் என்றார்
Subscribe to:
Posts (Atom)