This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

23 July 2020

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுனர் முடிவெடுக்காமைக்கு உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

இந்தியாவில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை 
அனுபவித்து வருகின்றனர்.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக 
ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.இது தொடர்பாக 
கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.7பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் எனவும், நீதிமகன்றம் அதிரடியாகக் கேள்வியெழுப்பியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>


ஆலங்குடியில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய இளைஞர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வசித்து வந்தவர் சதீஷ்குமார்(19). தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் சதீஸ்குமாரால் சமீபத்தில் இவரது வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரது அப்பா மற்றும் அண்ணன் இருவரும் சதீஷ்குமாரை மோசமாக 
திட்டி அடித்துள்ளனர்.
இந்த நிலையில், மனமுடைந்த சதீஷ்குமார், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். பின்னர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை செல்போனிலேயே டிசைன் செய்து அதனை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து சதீஷ்குமாரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து
 சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.பின்னர் மறுநாள் மழவராயன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்ட சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் கதறி துடித்துள்ளனர்.இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சதீஷ்குமாரின் தற்கொலைக்கு காரணமான அப்பா, அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


21 July 2020

இலங்கைக்குள் இந்தியாவிலிருந்து நுழைந்த பூனையினால் பேராபத்து

இந்திய உயரஸ்தானிகர் குழுவுடன் ஸ்ரீலங்கா வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற 
அச்சம் எழுந்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 -07-20.ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.இவர்களுடன் வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.அதனை
 ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வர பேராதனை விலங்கு
 உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இந்த பூனையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா 
என்பது குறித்த பரிசோதனை நடத்தப்படவில்லை எனத் தெரியவருகிறது.விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இது ஆபத்தான நிலைமை என விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


16 July 2020

கொரோனாவினால் எதிர்வரும் செப்ரெம்பரில் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்களாம்

நாட்டில் தற்போதைய நிலையைப்போன்று கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துச் சென்றால், செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) தெரிவித்துள்ளது.
அதேநேரம் அதில்
 10 இலட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக மஹராஷ்டிராவில் 6.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லியில் 2.4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், தமிழகத்தில் 1.6 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும்
 இந்திய அறிவியல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், குஜராத் மாநிலத்தில் 1.8 இலட்சம்
 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கர்நாடகாவில் மட்டும் 2.1 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் 2021 மார்ச்சில் 37.4 இலட்சம் பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் 1.88 லட்சம் பேர் வரையில் உயிரிழந்திருப்பார்கள் என அந்த ஆய்வில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் சஷிகுமார் தீபக் குழுவினர் கூறுகையில், செப்டம்பர் கணக்கின்படி இந்தியாவில் 1.4 இலட்சம் பேர்
 உயிரிழந்திருப்பார்கள். அதில், மஹாராஷ்டிராவில் 25 ஆயிரம், டில்லியில் 9,700 பேரும் கர்நாடகாவில் 8500 பேரும் தமிழகத்தில் 6300 பேரும் குஜராத்தில் 7300 பேரும் உயிரிழந்திருப்பார்கள் 
என தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>



09 July 2020

.நண்பனை கோழிக்கடை நடத்தும் தகராறில் வெட்டிக் கொலை செய்த நண்பர்கள்.

கோழிக்கறிக் கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை படுகொலை செய்துள்ளனர் வாலிபர்கள். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அம்மாப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உதயா (30) என்பவர் அங்குள்ள சந்தையில் தேவி பிராய்லர்ஸ் என்ற பெயரில் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தார். கடந்த 4ம் திகதி இரவு 10.30 மணியளவில், தனது கடைக்கு எதிர்ப்புறமுள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார் உதயா. 5ம் திகதி ஞாயிற்றுகிழமை என்பதால் முழு ஊரடங்கு இருந்தது. இதனால், 
அதிக மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிட்டிருக்கிறார் உதயா.
மது போத்தல் வாங்க உதயா வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், திடீரென உதயாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பித்துச் செல்ல உதயா முயன்றபோது அவரது முகத்திலேயே கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு 
அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு 
செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடினர்.இந்த நிலையில் உதயாவின் நண்பர்களான 
சுபாஷ் (32) மணிகண்டன் (32) ஆகியோர் மீது சந்தேகப்பார்வை விழுந்தது காவல்துறையினருக்கு. இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் உதயாவின் கடைக்கு அருகிலேயே நாங்கள் கோழிக்கறிக் கடை
 நடத்தி வந்தோம். இது உதயாவுக்குப் பிடிக்கவில்லை.இதனால், எங்களிடம் உதயா அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
உதயாவின் கடைக்கு கூட்டம் அதிகமாக சென்றது. எங்கள் கடை காத்தாடியது.இதனால் உதயாவை 
தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி உதயாவை படுகொலை செய்தோம்’ என்று கூறியுள்ளனர்.
2015ம் ஆண்டு உதயா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாக உதயா கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம் என தமிழகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>