This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 September 2020

எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம். மருத்துவமனை அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற பாடகர் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் 
முன்னேற்றம்
 இருப்பதாக அவர து மகன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

15 September 2020

ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் இப்படியும் நடக்கின்றது

கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் 
பெயர் கொரோனா.
இவருக்கு தற்போது 34 வயது. இவருக்கு 34 வருடங்களுக்கு முன் ஒரு பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் அர்த்தம் கிரவுன் (Crown) அதாவது 
கிரீடம் என்பதாகும்
தற்போது 2020ல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரொனாவால் அவரது பெயரைக் கேட்டதும் மக்கள் பதறுகிறார்கள். ஒரு சிலர் அவரை கேலி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரத்த தானம் செய்வதற்காக பெயரை எழுதியபோது மருத்துவர்களே தனது பெயரைப் படித்து அதிர்ச்சியடைந்ததாக திருமதி. எஸ்.கொரோனா கவலைத் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



10 September 2020

பெண் குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது

 

தமிழகத்தில் இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி 
கிராமத்தை சேர்ந்தவர் ரொசாரியோ (45). இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு ரென்சிமேரி (5) என்ற குழந்தை இருந்தது
. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்து விட்டார். இதையடுத்து
 ரொசாரியா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயை இழந்த குழந்தை ரென்சிமேரியை, 
ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் (70) வளர்த்து வந்தார். அதே வீட்டில் ஜெயராணியின் அக்காள் ஆரோக்கியமேரி (35) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு 
திருமணமாகவில்லை.
வழக்கம்போல் நேற்று காலை பச்சையம்மாள், கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது குழந்தை ரென்சிமேரி சாப்பிடுவதற்காக ஆரோக்கியமேரி இட்லி கொடுத்தார். ஆனால், குழந்தை, அந்த இட்லி தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட சென்றது.இதனால், ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி, வீதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தையை 
அடித்து, தரதரவென்று வீட்டுக்கு இழுத்து வந்தார். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட ஆரோக்கியமேரி, அந்த குழந்தையை அடித்து உதைத்தார். மேலும் வீட்டில் இருந்த
 கட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை அலறி துடித்தது. இந்த 
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை
 ரென்சிமேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஆரோக்கியமேரியை கைது செய்தனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



06 September 2020

கோதாவரி மாவட்டத்தில் திடீரெனத்தீப்பற்றியெரிந்த ஆலயத் தேர்

                                    

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆலயத் தேர் நள்ளிரில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கு சொந்தமான தேர், ஆலய வளாகத்திலுள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 
நிலையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்நிலையில், குறித்த சம்பவம் அறிந்து 
அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு 
துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், தேர் முழுவதும் எரிந்து சேதமாகியுள்ளது.இவ்வாறு 
ஆலயத்துக்கு சொந்தமான 
வரலாற்று சிறப்பு மிக்க 
தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.மேலும், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத 
நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



05 September 2020

எஸ்.பி.பாலா தமது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்

 

இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்,04-09-20. வெள்ளிக்கிழமை. அன்று தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்வு 
வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு 
பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு.04-09-20 அன்று  திருமண நாளாகும். இதனை முன்னிட்டு ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக பிரத்யேகமாக
 கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டது. பின்னர் வைத்தியர்களின் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரி ஆகிய இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 5ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு 
தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்த மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. ‘2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்’ என்று கூறி அவர் ஒரு காணொலியையும் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. 
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன் எம்.ஜி.எம்.மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டுவரும் நிலையில், நுரையீரல் செயல்பாடு இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான சிகிக்சைகள்
 தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.மகன் சரண் வெளியிட்ட காணொளியில், அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்
 நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.இந்நிலையிலேயே எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>