Search This Blog n

16 October 2020

இந்திய யாவில் 50 ஆயிரத்தை நோக்கி குறைந்து வரும் தினசரி பாதிப்புகள்

இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 73 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 
எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 73,70,469 ஆக 
உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,12,161 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64,53,780 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,04,528 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment