This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 April 2022

காங்கேசன்துறை கடற்படையினரால் இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் 
ஊடாக 29-04-2022.அன்றயதினம் இரவு இந்தியா நோக்கி படகொன்றில் 
பயணித்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் , கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்காக பலாலி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில், இன்று மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






29 April 2022

சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற இருவர் கைது

இலங்கையிலிருந்து இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.படகு மூலம் அகதிகளாக சென்ற இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்த தமிழக பொலிஸார், அவர்களை விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர். குறித்த இரண்டு பேரும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சம் அடைவதற்கான எவ்வித காரணங்களும் இல்லாததாலும் மீன்பிடி படகுடன் வந்ததாலும் அவர்களை அகதிகளாக பதிவதற்கு அதிகாரிகள்
 மறுத்துள்ளனர்.
இருவருக்கும் எதிராக கடவுச்சீட்டு இன்றி வந்ததாகக் கூறி இராமநாதபுரம் – தேவிபட்டினம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து இவர்களை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கான விசாரணையை கடலோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைதான இளைஞர்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவிய போது, அவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டி 
வருவதாக அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



21 April 2022

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின் இணைப்பு

இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக இலங்கை மின் சக்தி அமைச்சின் செயலாளர் 
வசந்த பெரேரா கூறியுள்ளார்.
இந்த திட்டம் இலங்கையின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிகப் பெரிய நீண்டகால முயற்சியாக கருதப்படுகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பரவலாக மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் 
இதன் மூலம் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கும் இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் இலஙகைக்கும் இடையிலான மின் விநியோக கட்டமைப்பை இணைப்பது தொடர்பான உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.இந்த திட்டத்திற்கு இந்தியா 
ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டதுடன் ஆயிரம் மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 
உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் கடல் மட்டத்தில் இருந்து 25 மீற்றர் ஆழத்தில் 500 மீற்றர் இடைவெளியில் கேபிள் இணைப்புகள் அமைக்கும் சாத்தியங்கள் தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இலங்கை – இந்தியா இடையிலான இந்த மின் இணைப்பு கட்டமைப்பானது 360 கிலோ மீற்றர் தொலைவை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்த மின் இணைப்பானது தமிழகத்தின் மதுரையில் இருந்து இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரத்திற்கும் செல்லும் வகையில் அமைக்கப்படலாம் என அப்போது கூறப்பட்டது.இந்த நிலையில், மீண்டும் இந்த திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



20 April 2022

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 544 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,656-க்கு விற்பனையாகிறது.
அதனபடி இன்று கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து, ரூ.4,957-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேவேளை ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 75,000 ரூபாயாக இருந்த நிலையில்,20-04-2022. இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் குறைந்து ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனை 
செய்யப்படுகிறது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>