Pages

06 February 2013

இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை,,,,,,

குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள முதலமைச்சர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை தனது வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக சந்தித்துள்ளார். குஜராத் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலவராகியுள்ள நரேந்திர மோடி, தனது வெற்றிக்கு பின்னர் டெல்லி வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று மாலை டெல்லி பல்கலைகழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், நேராக பிரதமர் இல்லம் சென்று மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார். அப்போது அவர் குஜராத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது

No comments:

Post a Comment