Pages
▼
28 February 2013
பிரித்தானியாவின் ஸ்மார்ட்போன் அம்சங்களைக் ?
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து(கடந்த 25ம் திகதி)பிஎஸ்எல்வி-20 ராக்கெட் மூலம் ஏழு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
இவற்றில் பிரித்தானியாவின் தயாரிப்பான ஸ்ட்ரான்டு-1(Strand-1) என்ற செயற்கைக்கோளும் ஒன்று. விண்வெளி சூழலில் ஸ்மார்ட்போனின் பாகங்கள், எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது.
பிரித்தானியாவின் விண்வெளி ஆய்வு மையமான எஸ்.எஸ்.சி., Surrey Space Centre (SSC) மற்றும் செயற்கை கோள் தொழில் நுட்பநிறுவனமான எஸ்.எஸ்.டி.எல்., Surrey Satellite Technology Limited (SSTL)ஆகியவை இணைந்து இதை தயாரித்துள்ளன. 4.3 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் ஸ்மார்ட்போன் அம்சங்கள் கொண்டது ஆகும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன், விண்வெளியில் வழக்கமான ஆய்வுகளுடன் வேடிக்கையான செயல்களையும் மேற்கொள்ளும்.
மனிதர்களின் அலறல் குரல்கள் பதிவான வீடியோ காட்சிகளை இந்த ஸ்மார்ட்போன் விண்வெளியில் ஒளிபரப்பும். மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள பதிவு செய்யும் கருவி அலறல் சத்தங்களை மீண்டும் பதிவு செய்யும்,,
By.Rajah


No comments:
Post a Comment