Pages

23 March 2013

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு .


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியரை ஊர் மக்கள் ஒன்று கூடி தர்மஅடி கொடுத்தனர்.
பதினாறுபுதூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஜெயசந்திரன் என்ற அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை தருவதாக 5ம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் அளித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மாணவியின் பெற்றோரும், மற்ற மாணவிகளின் பெற்றோரும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். ஊர்மக்களும் இவர்களுடன் சேர்ந்து ஆசிரியர் ஜெயச்சந்திரனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.


தகவல் அறிந்து அங்கு வந்த சந்திரப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து ஆசிரியரை விடுவித்தனர். சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment