Pages

17 August 2013

விசா விதிமுறைகளை இறுக்கியது கனடா! இந்தியர்களை!!


 
கடந்த பத்தாண்டுகளில் மற்ற எந்த நாட்டையும்விட கனடா நாட்டில்தான் பணி புரியும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.இதனைக் குறைத்து, உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் முயற்சியில் கனடா அரசு இறங்கியுள்ளது. அதன் விளைவாகவே விசா விதிமுறைகள் தற்போது கடினமாக்கப்பட்டுள்ளன. புதிய விசா விண்ணப்பப்படிவங்களுக்கு திருப்பிக் கிடைக்காத புதிய கட்டண விகிதங்கள் போடப்பட்டுள்ளன. புதிய ஊழியருக்கான விளம்பரம், முதலில் உள்ளூர் பத்திரிகைகளில் மூன்று மாதங்களுக்கு முன்னால் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு அளிக்கப்படவேண்டும். இதுமட்டுமில்லாமல், நிறுவனதாரர்கள் குறைந்தது இரண்டு முறைகளிலாவது இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிரூபிக்க வேண்டும்.
ஆங்கிலமும், பிரெஞ்ச் மொழியும் தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். இது இல்லாமல் எவரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு வலுவான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். கனடா நாட்டவர்களுக்கு அளிக்கப்படும் சராசரி ஊதியத்தைவிட 15 சதவிகிதம் குறைவாகக் கொடுப்பதன் மூலம் ஒரு வெளிநாட்டவரை இங்கு பணியில் அமர்த்தலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது.
கடந்த ஏப்ரலில் இந்த நடைமுறையை முற்றிலும் நீக்க அரசு முடிவெடுத்து இத்தகைய புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தற்காலிகமாகப் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களை விடுத்து, கனடா ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்ககூடிய இந்த விதிமுறைகள் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வசீகரத்தைக் கொடுக்காது என்று சட்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாக பங்குதாரரான சஜன் பூவய்யா தெரிவிக்கின்றார்.
 

No comments:

Post a Comment